ஜூன் 1 முதல் 'டிரேஸ்டுகெதர்' மட்டும் பயன்படுத்தி நுழைவு பள்ளிகள் உட்பட அதிகமானோர் செல்லும் இடங்களில் புதிய 'சேஃப்என்ட்ரி' நடைமுறை

ஜூன் 1 முதல் 'டிரேஸ்டுகெதர்' மட்டும் பயன்படுத்தி நுழைவு பள்ளிகள் உட்பட அதிகமானோர் செல்லும் இடங்களில் புதிய 'சேஃப்என்ட்ரி' நடைமுறை

2 mins read
dadb4c7d-00f6-4396-bf56-821165073704
'டிரேஸ்டுகெதர் மட்டும் சேஃப்என்ட்ரி' முறை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் எதிர்­வ­ரும் ஜூன் 1ஆம் தேதி முதல், அதி­க­

மா­னோர் வந்­து­செல்­லும் இடங்­

க­ளுக்­குள் நுழைய 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி அல்­லது கரு­வியை மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும்.

கடைத்­தொ­கு­தி­கள், வேலை­யி­டங்­கள், வழி­பாட்­டுத் தலங்­கள், பள்­ளி­கள், கல்வி நிலை­யங்­கள், உணவு, பானக் கடை­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள் உள்­ளிட்­டவை அந்த இடங்­களில் அடங்­கும். அந்த இடங்­களில் ஏற்­கெ­னவே 'சேஃப்என்ட்ரி' மின்­னி­லக்க பதி­வு­முறை நடப்­பில் இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூர்­வா­சி­களில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் அதி­க­மா­னோர் 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­னர் அல்­லது கரு­வி­யைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளதை அடுத்து, 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி அல்­லது சாதன கட்­டா­யப் பயன்­பாடு நடப்­புக்­குக் வரு­கிறது என்று அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­க­மும் சுகா­தார அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

கைபேசி கேம­ரா­வைக் கொண்டு 'சேஃப்என்ட்ரி கியூ­ஆர்' குறி­யீட்டை வரு­டு­வது அல்­லது 'சிங்­பாஸ்' செய­லி­யைக் கொண்டு நுழை­வைப் பதிவு செய்­வது போன்ற 'சேஃப்என்ட்ரி' பதிவு முறை ஜூன் 1ஆம் தேதி முதல் நிறுத்­தப்­படும்.

'டிரேஸ்­டு­கெ­தர்' மூலம் வரு­கை­யைப் பதி­வு­செய்­யும்­போது பெரிய கடைத்­தொ­கு­தி­களில் உள்ள பேரங்­கா­டி­கள், பகு­தி­வா­ரிக் கடை­கள் உள்­ளிட்ட தனித்­தனி கடை­க­ளுக்­குள் நுழைய ஏற்­கெ­னவே 'சேஃப்என்ட்ரி' மூலம் வரு­கை­யைப் பதி­வு­செய்­யும் நடை­மு­றை­யும் நீக்­கப்­படும்.

'டிரேஸ்­டு­கெ­தர்' மூலம் வரு­கை­யைப் பதி­வு­செய்­யும் முறைக்கு கட்­டா­ய­மாக்­கப்­ப­டாத இடங்­கள், ஏற்­கெ­னவே 'சேஃப்என்ட்ரி' மூலம் வரு­கை­யைப் பதி­வு­செய்­யும் ஏற்­பாட்டை நிறுத்த வேண்­டும். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சௌக­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தித் தரு­வதே இதன் நோக்­கம். மருந்­துக்­க­டை­கள், பல்­பொ­ருள் அங்­கா­டி­கள், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக பேட்­டை­களில் அமைந்­துள்ள சில்­லறை விற்­ப­னைக் கடை­கள் உள்­ளிட்­டவை அத்­த­கைய இடங்­களில் அடங்­கும்.

அரு­க­ருகே இருக்­கும் 'டிரேஸ்­டு­கெ­தர்' சாதனங்கள் அல்­லது செய­லி­யைக்கொண்ட கைபே­சி­கள் புளுடூத் சமிக்­ஞை­களை குறு­கிய தூரத்­துக்­குப் பரி­மா­றிக்­கொள்­வ­தன் மூலம் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காணமுடி­யும்.

தொடர்­பு­ த­டங்­க­ளைக் கண்­ட­

றி­யும்­போது தவ­ற­வி­டப்­பட்ட,

தனி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய 75 பேரை அடை­யா­ளம் காண இந்­தத் தொழில்­நுட்­பம் உத­வி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'டிரேஸ்­டு­கெ­தர் மட்­டும் 'சேஃப் என்ட்ரி' திட்­டம் நடப்­புக்கு வந்­த­பி­றகு, தங்­க­ளது 'டிரேஸ்­டு­கெ­தர்' கரு­வியை அல்­லது அந்­தச் செய­லி­யைக்கொண்ட கைபே­சியை எடுத்­து­வர மறந்­து­விட்­டால்­கூட, அவர்­கள் பள்­ளிக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­ப­டாது என கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

பள்­ளி­க­ளுக்­குள் நுழைய தங்­க­ளது 'டிரேஸ்­டு­கெ­தர் சாத­னத்­தையோ அல்­லது செய­லி­யையோ பயன்­ப­டுத்­தத் தேவை­யில்லை.

'டிரேஸ்­டு­கெ­தர்' கரு­வியை இன்­னும் பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­கள் சமூக மன்­றங்­களில் அதைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இது­கு­றித்த மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு token.gowhere.gov.sg எனும் இணை­யப்­பக்­கத்­தை நாடலாம்.