மே தின சிறப்பு விருதுகள் அறிவிப்பு

மே தின சிறப்பு விருதுகள் அறிவிப்பு

2 mins read
5fa820f3-eacf-49c1-a31e-b84b1e77f779
சிறப்பு சேவை விருதைப் பெறும் போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் (இடது), மனி­த­வள அமைச்­சின் நிர­ந்த­ரச் செய­லா­ளர் ஔபெக் காம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் ஊடக மேம்பாட்டு ஆணையம் -
multi-img1 of 2

போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், மனி­த­வள அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் ஔபெக் காம் ஆகி­யோர், இவ்­வாண்­டின் மே தின விரு­களில் உய­ரிய விரு­தான சிறப்பு சேவை விரு­தைப் பெறு­கின்­ற­னர்.

சுகா­தா­ரம் மற்­றும் பொதுப் போக்குவ­ரத்து ஊழி­யர்­க­ளைத் தவ­றாக நடத்­து­வ­தி­லி­ருந்து பாது­காப்பு அளிப்­ப­தற்கு வலு­வாக ஆலோ­ச­க­ராக திரு சீ விளங்­கி­னார். ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் மற்­றும் வேலை நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்­பைத் திரு காம் நல்­கி­னார்.

பாராட்டு சேவை விருது பெற்ற பிற­கும் மூன்று ஆண்­டு­கள் அல்­லது அதற்கு மேற்­பட்ட காலத்­துக்கு துடிப்­பு­ட­னும் தொடர்ந்­தும் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை நல்­கு­வோ­ருக்கு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் சிறப்பு சேவை விருதை வழங்­கு­கிறது. திரு சீ, திரு காம் ஆகி­யோர் உட்­பட 143 தனி­ந­பர்­கள், அமைப்­பு­கள் அடுத்த புதன் கிழமை விருது பெறு­வர்.

தொழிற்­சங்­கத் தலை­வர்­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள், கொவிட்-19 கார­ண­மா­க ­நி­ல­வும் நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழ­லில் ஊழி­யர்­

க­ளின் விருப்­பத்தை ஊக்­கு­விக்­கும் நிறு­வ­னங்­கள், வேலை­யி­டங்­களில் முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் ஊழி­யர்­கள் போன்­ற­வ­ர்­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.

மே தின விரு­து­களில் ஆக உய­ரிய 'கௌரவ விருது' பெறு­ப­

வ­ரின் பெயர் அடுத்த செவ்­வாய்க்­கி­ழமை அறி­விக்­கப்­படும். தொழி­லா­ளர் இயக்­கத்­துக்கு மிகச் சிறந்த சேவை வழங்­கிய தனி­ந­பர்­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­படும்.

டௌன்­ட­வுன் ஈஸ்­டில் நடை­பெற இருக்­கும் விருது நிகழ்ச்சி இரண்டு அமர்­வு­க­ளாக நடத்­தப்­படும். இணை­யம் வழி­யா­க­வும் பங்­கேற்­பா­ளர்­கள் கலந்­து­கொள்­வர். கடந்த ஆண்டு கொவிட்-19 சூழல் கார­ண­மாக விருது நிகழ்ச்சி குறிப்­பிட்ட இடத்­தில் நடத்­தப்­ப­ட­வில்லை என்­றா­லும் விரு­து­க­ளுக்­குத் தகு­தி­யா­ன­வர்­கள் அவர்­க­ளது பங்­க­ளிப்­புக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர்.

தொழி­லா­ளர் இயக்­கத்­தைச் சேர்ந்த சகோ­தர, சகோ­த­ரி­க­ளு­டன் இணைந்து ஊழி­யர்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த தொடர்ந்து பணி­யாற்­றப்­போ­வ­தாக திரு சீ குறிப்­பிட்­டார். 'யூபேஜ்' எனும் ஆற்­றல் மற்­றும் எரி­வாயு தொழி­லா­ளர்­க­ளின் சங்­கம், 'எச்­எஸ்­இயு' எனப்­படும் சுகா­தா­ரச் சேவை­கள் தொழி­லா­ளர் சங்­கம் ஆகி­ய­வற்­றுக்கு அணுக்­க­மாக ஆலோ­சனை வழங்கி வந்­தார் திரு சீ.

கொரோனா தொற்­றுப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து, வேலை­

யி­டங்­களில் பாது­காப்பு நிவாக நட­வ­டிக்­கை­கள், மனி­த­வள நிர்­வா­கம் மற்­றும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டுதி தேவை­கள் போன்­ற­வற்­றின் தொடர்­பில் தக்க சம­யத்­தில் ஆலோ­ச­னை­கள் வழங்கி, திட்­டங்­கள் செயல்­ப­டுத்தி திரு காம் முக்­கிய பங்­காற்­றி­னார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள மாதி­ரியை விரி­வு­ப­டுத்­தி­யது, ஓய்வு மற்­றும் மறு வேலை­வாய்ப்பு வய­தை உயர்த்­து­வது போன்ற முக்­கிய முத்­த­ரப்பு முயற்­சி­க­ளி­லும் அவர் ஈடு­பட்­டி­ருந்­தார்.

'யூபேஜ்' அமைப்­பின் முன்­னாள் கௌரவ பொதுச் செய­லா­ளர்

அம­ரர் நாச்­சி­யப்­பன் ரங்­க­சாமி கிருஷ்­ண­சாமி சின்­னையா, சிங்­கப்­பூர் விமான நிலைய முனைய சேவை­கள் தொழி­லா­ளர் சங்­கத்­தின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் அம­ரர் குண­சே­க­ரன் சிவ­ஞா­னம் ஆகி­யோ­ருக்கு தொழி­லா­ளர் தோழர் விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.