அதிபர் ஹலிமா: மெத்தனம் கூடாது

அதிபர் ஹலிமா: மெத்தனம் கூடாது

1 mins read
79ca7f3c-ca9b-40e1-ae11-72d0b170fb19
-

கொவிட்-19 சூழல் சிங்­கப்­பூ­ரில் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் மெத்­த­னப்­போக்­கு­டன் இருந்­து­வி­டக்­கூ­டாது என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று முன்­தி­னம் நினை­வூட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடும் பணி­ சுமு­க­மாக நடந்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார். இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து சமூக இடை­வெளி விதி­முறை உட்­பட மற்ற பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் தொடர்ந்து கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றார் அவர்.

உல­கில் மக்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வரை எந்த நாடும் கொரோ­னா­வி­லி­ருந்து முழு­மை­யான பாது­காப்­பைப் பெறாது என்று அதி­பர் ஹலிமா கூறி­னார்.

சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் 2018ஆம் ஆண்­டில் திறக்­கப்­பட்ட நீரி­ழிவு, உடல்­ப­ரு­மன் சிகிச்­சைப் பிரிவைப் பார்வையிட்ட அதி­பர் ஹலிமா அங்­குள்ள ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார்.