தொல்லைகொடுக்கும் பூச்சிகளை நிர்வகிக்கும் துறையில் உள்ள சிறிய, நடுத்தர அளவிலான நிறு
வனங்கள் தங்களது சேவை தொடர்பான மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்க நிதி உதவி
பெற்றுக்கொள்ளலாம். புத்துயிரூட்டப்பட்ட சுற்றுச்சூழல் சேவைகள் தொழில்துறை மின்னிலக்கத் திட்டத்தின் அங்கமாக இந்த உதவி அமைகிறது.
இந்தத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மின்னிலக்கத் தீர்வுகளுக்கு சுற்றுச்சூழல் சேவைகள் துறைக்கான உற்பத்தித்திறன் தீர்வுகள் நிதியுதவி பெறப்படலாம்.
ரேபன் பார்க்கில் உள்ள தொழில்துறை மற்றும் வர்த்தக வசதிகள் நிர்வாக நிறுவனத்தை நேற்று
பார்வையிட்டபோது நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 சூழல் காரணமாக முக்கியமான இடத்தைப் பிடித்
திருக்கும் சுற்றுச்சூழல் சேவைகள் துறைக்கு கூடுதல் தேவை நிலவு வதாலும் மனிதவள கட்டுப்பாடுப் பிரச்சினைகள் இருப்பதாலும் அந்தத் துறையின் உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
சுற்றுச்சூழல் சேவைகள் துறையில் பணியாற்றுவோரின் சராசரி வயது அதிகம் என்று குறிப்பிட்ட அவர், துப்புரவாளர்களின் சராசரி வயது 60 என்றும் கழிவு நிர்வாகத் துறையில் பணியாற்றுவோரின் சராசரி வயது 49 என்றும் குறிப்பிட்டார்.
புத்துயிரூட்டப்பட்ட சுற்றுச்சூழல் சேவைகள் தொழில்துறை மின்னிலக்கத் திட்டத்தின்கீழ் மூன்று துணைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய, மேம்பட்ட தொழில்நுட்பத்தை தங்களது சேவையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
கழிவு நிர்வாகத்தில் 'பிளாக்செயின்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்துவது போன்றவையும் இதில் அடங்கும் என தேசிய சுற்றுப்புற வாரியம், தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆனையம் ஆகியவை நேற்று வெளியிட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

