கைதிகளின் நடமாட்டத்திற்கு முக அடையாள தொழில்நுட்பம்

கைதிகளின் நடமாட்டத்திற்கு முக அடையாள தொழில்நுட்பம்

2 mins read
cd400f69-28e7-4c78-b027-384f93ce1fee
அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ள புதிய சிறை வளாகம். படம்: சிங்கப்பூர் சிறைச் சேவை -

சிங்­கப்­பூர் சிறைச் சேவைப் பிரிவு புதி­தாக ஏற்­ப­டுத்தி உள்ள ஒருங்­கி­ணைந்த சேவை மைய­மான சிலாராங் பார்க் காம்ப்­ளக்­ஸில் நவீன தொழில்­நுட்­பம் நிறு­வப்­பட்டு உள்­ளது. சிறை வளா­கங்­க­ளுக்கு இடை­யி­லும் வளா­கங்­க­ளின் இதர பகு­தி­க­ளி­லும் நட­மா­டும் கைதி­க­ளு­டன் சிறை அதி­கா­ரி­கள் உடன் செல்­வது வழங்­க­கம்.

ஆனால் இனி அதற்கு அவ­சி­யம் இருக்­காது. ஒரு வளா­கத்­தில் இருந்து மற்­றொரு வளா­கத்­திற்­குள் சுழல் கதவு வழி­யாக நுழை­யும் கைதி­கள் தங்­க­ளது முக அடை­யா­ளத்­தை­யும் கைப்பட்டைக் கரு­வி­யை­யும் ஸ்கேன் செய்­தால் போது­மா­னது.

வளா­கங்­களில் விரி­வாக்­கம் செய்­யப்­பட்ட கண்­கா­ணிப்­புக் கருவி, முக அடையாளத் தொழில்­நுட்­பப் பயன்­பாடு ஆகி­யன கார­ண­மாக இந்­தப் புதிய வசதி சாத்­தி­ய­மாகி உள்­ளது.

கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் முழு­மை­யா­கச் செயல்­ப­டத் தொடங்­கிய சிலாராங் பார்க் காம்ப்­ளக்ஸை சட்ட, உள்­துறை அமைச்­சர்

கா.சண்­மு­கம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைத்­தார்.

போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­

க­ளுக்­கான மறு­வாழ்வு மையம் உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­கள் இத­னுள் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

சிங்­கப்­பூ­ரி­லேயே முக அடையாள தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் முதல் சிறை வளா­கம் சிலாராங் பார்க் காம்ப்­ளக்ஸ் என்று சிங்­கப்­பூர் சிறைத்­துறை சேவை தெரி­வித்துள்­ளது.

போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­

க­ளுக்­கான மறு­வாழ்வு மையத்­தில் உள்­ள­வர்­கள் உள­வி­யல் அடிப்

­ப­டை­யி­லான சீர்­தி­ருத்­தப் பயிற்­சித் திட்­டங்­க­ளி­லும் திறன்­வ­ளர்ப்­புப் பயிற்­சி­க­ளி­லும் பங்­கேற்­பர். குடும்ப ஆத­ர­வை­யும் சம­யச் சேவை­க­ளை­யும் அவர்­கள் பெறு­வர்.

தற்­போது புதி­தாக நிறு­வப்­பட்­டுள்ள முக அடையாளத் தொழில்­நுட்ப வசதி சிறைத் துறை சேவை­யின் 'காவ­லர்­க­ளற்ற கைதி­கள்' என்­னும் உத்­தி­யின் ஒரு பகுதி. சிறை வளாக செயல்­முறை ஆற்­றலை மேம்­ப­டுத்­தும் நோக்­கம் கொண்­டது இந்த உத்தி. அத்­து­டன் கைதி­க­ள் மறு­வாழ்­வின் மீது சிறை அதி­கா­ரி­கள் கவ­னம் செலுத்­ த­வும் இது வகை செய்­கிறது.

இந்த முக அடையாளத் தொழில்­நுட்­பம், நுழைவு அனு­ம­திக்­குப் பயன்­ப­டு­வ­தோடு சிறைக்குள் அடைக்கப்பட்ட கைதி­க­ளைக் கணக்­கெ­டுக்­க­வும் உறு­துணை புரி­யும். மேலும், அனு­ம­திக்­கப்­ப­டாத இடங்­களில் நுழை­யும் கைதி­களை அடை­யா­ளம் காண­வும் இது உத­வும் என்று சிங்கப்பூர் சிறைச் சேவை தெரி­வித்துள்­ளது.