மனு தள்ளுபடி: நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த ஆடவருக்கு சிறை

மனு தள்ளுபடி: நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த ஆடவருக்கு சிறை

2 mins read
c3857c93-69d2-4a16-aa8a-d85c36b27be8
-

உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யை­யும் சிங்­கப்­பூ­ரின் நீதி­மு­றை­யை­யும் அச்­சு­றுத்­தி­யது உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்­காக ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று ஏழு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஓரி­னப் புணர்ச்சி குற்­றம் என்று வகைப்­ப­டுத்­தும் குற்­ற­வி­யல் விதித்­தொ­குப்பு பிரிவு 377ஏ-வை எதிர்த்து முகம்­மது ஹனிஃப் முகம்­மது ஹுஸைரி, 31, எனப்­படும் அவர் வழக்­குத் தொடுத்து இருந்­தார். அந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து சமூக ஊட­கத் தள­மான இன்ஸ்­ட­கி­ரா­மில் நீதி­ப­திக்­கும் நீதி­மு­றைக்­கும் எதி­ரான வன்­மு­றையை அவர் தூண்­டி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

துன்­பு­றுத்­த­லில் இருந்து பாது­காத்­தல் சட்­டத்­தின்­கீழ் அர­சாங்க ஊழி­யரை நோக்கி அச்­சு­றுத்­தல் வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­திய ஒரு குற்­றச்­சாட்டை கடந்த மாதம் அந்த சிங்­கப்­பூ­ரர் ஒப்­புக்­கொண்­டார்.

மேலும் வன்­செ­ய­லைத் தூண்­டும் மின்­னணுப் பதிவு ஒன்­றைப் பரப்­பி­விட்ட இரு குற்­றச்­சாட்­டு­

க­ளை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார். தமது மனு­வைத் தள்­ளு­படி செய்த நீதி­ப­திக்கு தமது சமூக ஊட­கப் பதி­வு­களை அனுப்பி வைத்­தார். மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­ட­போது ஹனிஃப் வருத்­த­ம­டைந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 4 மணி­ய­ள­வில் இன்ஸ்­ட­கி­ரா­மில் ஒரு தக­வலை பதி­வேற்­றி­னார். மனு­வைத் தள்­ளு­படி செய்த நீதி­ப­தியை வசை­பா­டி­ய­தோடு அச்­சு­றுத்­தும் வகை­யி­லான தக­வ­லை­யும் அவர் இணைத்­தி­ருந்­தார். அந்­தப் பதிவு இன்ஸ்­ட­கி­ரா­மில் 24 மணி நேரம் இருந்­தது. அப்­போது அந்­தக் கணக்கை 267 பேர் பின்­தொ­டர்ந்­தி­ருந்­த­னர்.

வன்முறைக்கு வித்திடும் வகை யிலான அச்சுறுத்தல் அத்தகவலில் காணப்பட்டதைத் தொடர்ந்து ஹனிஃபுக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டது.