கொவிட்-19 குழு தலைமையில் மாற்றம் அமைச்சர்கள் ஓங் யி காங், லாரன்ஸ் வோங் இருவரும் சிறப்புப் பணிக்குழுவுக்குப் பொறுப்பு ஏற்கிறார்கள்

கொவிட்-19 குழு தலைமையில் மாற்றம் அமைச்சர்கள் ஓங் யி காங், லாரன்ஸ் வோங் இருவரும் சிறப்புப் பணிக்குழுவுக்குப் பொறுப்பு ஏற்கிறார்கள்

2 mins read
0f6a079f-cd59-448c-9ef6-4c7f6633511f
-

சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை மாற்றத்தை அடுத்து நாட்­டின் சுகா­தார அமைச்­ச­ராக ஓங் யி காங் பொறுப்பு ஏற்­கி­றார். அவர் அமைச்­சர் லாரன்ஸ் வோங்­கு­டன் சேர்ந்து கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழுவுக்­குத் தலைமை ஏற்­கி­றார்.

புதிய அமைச்­ச­ரவை மாற்­றம், அடுத்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­துக்­குப் பிறகு மே 15 முதல் நடப்புக்கு வரு­கிறது. பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று அமைச்­ச­ரவை மாற்­றம் பற்றி அறி­வித்­தார்.

இப்­போது போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றும் திரு ஓங், சுகா­தார அமைச்­ச­ராக திரு கான் சாதித்­த­வற்றை மேலும் பலப்­படுத்­து­வார் என்று பிர­த­மர் தெரி­வித்­தார். "திரு ஓங் சென்ற ஆண்டு போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார். அது முதல் அவர் பெரும் சவால்­க­ளைத் திறம்­பட சமா­ளித்து வரு­கி­றார்.

"சிங்­கப்­பூ­ரின் எல்­லை­களை மீண்­டும் திறக்­கப் பாடு­ப­டு­வது, விமான, கப்­பல் மையம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலை­யைக் கட்­டிக்­காப்­பது முத­லான பல­வும் அந்­தச் சவால்­களில் உள்­ள­டங்­கும்.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் அமைச்­சர் திரு கான் கிம் யோங் சாதித்து இருக்­கும் வலு­வான அடிப்­ப­டை­களை புதிய சுகா­தார அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கும் திரு ஓங் மேலும் பலப்­ப­டுத்­து­வார்," என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக் குழு­வுக்கு தலைமை ஏற்­கும் இரண்டு அமைச்­சர்­க­ளி­டம் இருந்து என்ன எதிர்­பார்க்­கி­றீர்­கள் என்று கேட்­ட­போது, அனை­வரும் அணுக்­க­மா­கச் சேர்ந்து செயல்­பட்டு ஒத்­துழைத்து, கொள்­கை­கள் அனைத்­தும் நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வதை­யும் எது­வும் கைந­ழு­விப் போய்­வி­ட­வில்லை என்­ப­தை­யும் உறு­திப்­படுத்துவார்­கள் என்று பிர­த­மர் கூறி­னார்.

"சுகா­தார அமைச்­சர் திரு கான் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னோ­டி­யாக இருந்து வந்­தி­ருக்­கி­றார்­.

"சுகா­தார அமைச்­சர் என்ற முறை­யில் அவர், பல முக்­கிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சீர்­தி­ருத்­தங்­களை அமல்­ப­டுத்தி இருக்­கி­றார்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

"அமைச்­ச­ரவை மாற்­றத்தை அடுத்து திரு கான் வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கி­றார். இதில் அவர் நாட்­டின் பொரு­ளி­யல் மீட்­சியை மேற்­பார்வை­யி­டு­வார், புதிய வாய்ப்­பு­களை தொடர்­வார்," என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

இந்­தப் பத­விக்குத் திரு கான் மிக­வும் பொருத்­த­மா­ன­வர் என்ற பிர­த­மர், ஏற்­கெ­னவே மனி­த­வள அமைச்­சில் அவர் சேவை­யாற்றி இருக்­கி­றார் என்­றும் வர்த்­தக தொழில் அமைச்­சில் வாழ்க்­கைத் தொழில் அனு­ப­வம் அவ­ருக்கு உண்டு என்­றும் தெரி­வித்­தார்.

சுகா­தார அமைச்­ச­ராக ஏறத்­தாழ பத்து ஆண்­டு­க­ளாக பணி­யாற்றி வரும் திரு கான் கிம் யோங், வர்த்தக, தொழில் அமைச்­ச­ரா­கிறார். திரு கான் கிம் யோங்­கிற்குப் பதி­லாக திரு ஓங் சுகா­தார அமைச்­ச­ரா­கி­றார்.

இப்­போது கல்வி அமைச்­ச­ரா­கச் சேவை­யாற்றி வரும் திரு லாரன்ஸ் வோங், அடுத்த மாதம் நிதி அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கி­றார்.