'வெவ்வேறான அனுபவங்களைப் பெற உதவும் பெரும் மாற்றங்கள்'

'வெவ்வேறான அனுபவங்களைப் பெற உதவும் பெரும் மாற்றங்கள்'

3 mins read
fcdf2c51-d76e-4d34-aaef-61bb1f81569d
-

சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை மே 15 முதல் மாற்­றம் காண்­கிறது. சில அமைச்­சர்­கள் புதிய பொறுப்­பு­களை ஏற்க இருக்­கி­றார்­கள். அமைச்­சர்­கள் வெவ்­வே­றான ஈடு­பா­டு­களை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் பெறு­வ­தற்கு உத­வும் வகை­யில் பெரிய மாற்­றங்­கள் செய்­யப்­ப­டு­கின்­றன என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று அறி­வித்­தார்.

"புதிய பத­வி­களில் அமைச்­சர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து பாடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு­களை அமைச்­ச­ரவை மாற்­றம் வழங்­கு­கிறது. இதன்­மூ­லம் அவர்­கள் ஒரு­வரை ஒரு­வர் சிறந்த முறை­யில் புரிந்­து­கொண்டு ஒரே குழு­வா­கப் பிணைப்பை பலப்­ப­டுத்த முடி­யும்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

இதன்­மூ­லம் தன்­னி­டம் இருந்­தும் தனது பழைய சகாக்­க­ளி­டம் இருந்­தும் பொறுப்பு­களை எடுத்­துக்கொள்ள புதிய குழு தயா­ராக முடி­யும் என்­றும் பிர­த­மர் கூறினார்.

அமைச்­சர்­க­ளுக்­கான புதிய பொறுப்­பு­கள் பற்­றி­யும் அவை தொடர்­பான பல விளக்­கங்­க­ளை­யும் விவ­ரங்­க­ளை­யும் திரு லீ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விவ­ரித்­தார்.

"நிதி அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க இருக்­கும் திரு லாரன்ஸ் வோங் 2016ஆம் ஆண்டு முதல் இரண்­டா­வது நிதி அமைச்­ச­ராக செய­லாற்றி அதன் மூலம் நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட்­டுக்கு உதவி வந்­தி­ருக்­கி­றார். ஆகை­யால் திரு வோங் போதிய அனு­ப­வம் பெற்றவர். நிதி அமைச்­சர் பத­விக்கு இயற்­கை­யி­லேயே பொருத்­த­மா­ன­வர்," என்று பிரதமர் கூறி­னார்.

இரண்­டா­வது நிதி அமைச்­ச­ரான இந்­தி­ராணி ராஜா அவ­ருக்கு உதவுவார்.

திரு சான் சுன் சிங், கல்வி அமைச்­ச­ரா­கப் பொறுப்பு ஏற்­பது பற்றி தெரி­வித்த பிர­த­மர், "முந்­தைய கல்வி அமைச்­சர்­கள் சாதித்­த­வற்றைப் பலப்­ப­டுத்தி கல்வி முறையை திரு சான் மேம்­படுத்­து­வார்.

"அதன்­மூ­லம் ஒவ்­வொரு பிள்­ளை­ மற்றும் மாண­வ­ரின் முழு ஆற்­ற­லும் வெளிப்­படும். எதிர்­கா­லத்­திற்குரிய இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் உரு­வாக்­கு­வார்," என்றார்.

"சுகா­தார அமைச்­ச­ராகப் பொறுப்பேற்கும் திரு ஓங் யி காங், இப்­போ­தைய அமைச்­சர் ஏற்­ப­டுத்தி இருக்­கும் வலு­வான அடிப்­படை­களை மேலும் பலப்­ப­டுத்­து­வார்.

"மக்­கள்­தொகை மூப்­ப­டை­தல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிதி வளம் போன்ற பிரச்­சி­னை­களை திரு ஓங் திறம்­படக் கையாள்­வார்," என்றார் பிர­த­மர்.

"ஏறத்தாழ 10 ஆண்­டு­க­ளாக சுகாதார அமைச்­ச­ரா­கப் பதவி வகித்து வரும் திரு கான் கிம் யோங், வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரா­கப் பதவி ஏற்­கி­றார். இந்­தப் புதிய பொறுப்பு மிக முக்­கி­ய­மா­னது.

"திரு கான், பொரு­ளி­யல் மீட்­சியை மேற்­பா­ர்வை­யி­டு­வார். பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கான புதிய வாய்ப்­பு­களை அவர் தேடு­வார்," என்று திரு லீ தெரிவித்தார்.

"போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க இருக்­கும் திரு எஸ். ஈஸ்­வ­ரன், நமது போக்­கு­வ­ரத்து முறை­யின் தரம், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த நிலை, கட்­டுப்­படி­யா­கக்கூடிய நிலை ஆகி­ய­வற்றைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­து­வார்.

"கொவிட்-19க்கு பிந்­தைய உல­கில் உலக விமான, கடல் மைய­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து திகழ வேண்­டும். இது மிக முக்­கி­ய­மா­னது," என்­றார் திரு லீ.

தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க இருக்­கும் திரு­வாட்டி ஜோச­ஃபின் டியோ, அறி­வார்ந்த நாடு செயல்­திட்­டத்­துக்­கும் இணை­யப் பாது­காப்­பிற்­கும் பொறுப்­பேற்­பார். இவர் பல­த­ரப்­பட்ட கொள்­கை­க­ளுக்­குப் பொறுப்பு வகித்து வந்­து உள்ளதைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

நிதி அமைச்­சர் பத­வியை ஹெங் சுவீ கியட் கைவி­டு­கி­றார். இது பற்றி கருத்து தெரி­வித்த பிர­த­மர், இதன் மூலம் திரு ஹெங், அர­சாங்­கத்­தின் முழு பொரு­ளி­யல் நிகழ்ச்சி நிர­லி­லும் மேலும் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்த வாய்ப்பு இருக்­கும் என்­று தெரிவித்தார்.