மே தின தனிச்சிறப்புமிக்க சேவை விருது பெறும் அமைச்சர் சீ ஹொங் டாட் என்டியுசி துணைத் தலைமைச் செயலாளராகிறார்

மே தின தனிச்சிறப்புமிக்க சேவை விருது பெறும் அமைச்சர் சீ ஹொங் டாட் என்டியுசி துணைத் தலைமைச் செயலாளராகிறார்

2 mins read
4e18218b-3f9a-48cb-b129-b835f68f070d
-

போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், 47, தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ர­சின் துணைத் தலைமைச் செய­லா­ள­ராகிறார்.

வெளி­யு­றவு அமைச்­சில் வகிக்கும் பத­வியை அவர் கைவிடு­வார். என்­டி­யு­சி­யில் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் ஆற்றி வரும் பணியை மே 15 முதல் திரு சீ மேற்­கொள்­வார்.

பிர­த­மர் லீ சியன் லூங் இந்த மாற்­றங்­களை நேற்று அறி­வித்­தார். என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங்­கு­டன் கலந்து ஆலோ­சித்த பிறகு திரு சீயை தொழிற்­சங்க இயக்­கத்­துக்கு அனுப்­பும் முடிவை தான் எடுத்­த­தாக பிர­த­மர் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் என்­டி­யுசி தலை­வர் மேரி லியூ­வுக்கு பிர­த­மர் கடி­தம் எழு­தி­னார்.

அதற்­குப் பதில் அளித்த திரு­வாட்டி லியூ, தொழிற்­சங்க இயக்­கத்­துக்குத் திரு சீ வரு­வதை என்டியுசி மத்­திய குழு வர­வேற்­பதா­கத் தெரி­வித்­தார்.

என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் திரு இங், துணை தலை­மைச் செய­லா­ளர்­க­ளான ஹெங் சீ ஹாவ், சாம் ஹுவி ஃபோங் ஆகி­யோ­ரு­டன் தொழிற்­சங்க இயக்­கத்­தில் திரு சீ சேவை­யாற்­று­வார். திரு சீ, போக்­கு­வ­ரத்து அமைச்­சில் மூத்த துணை அமைச்­ச­ரா­க­வும் தொடர்ந்து பணி­யாற்­று­வார். திரு சீ, 2015ல் நடந்த பொதுத் தேர்­த­லில் பீஷான்- தோ பாயோ குழுத் தொகு­தி­யில் தேர்ந்து எடுக்­கப்­பட்­டார்.

தொடர்ந்து அவர் சுகா­தார மற்றும் தொடர்பு, தக­வல் துணை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார். 2017ல் மூத்த துணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

சுகா­தாரப் பரா­ம­ரிப்பு, பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழியர்­கள் தவறாக நடத்­த­ப்ப­டு­வதற்கு எதிராக குரல் கொடுத்து தொண்­டாற்­றி­ய­தற்­காக இந்த ஆண்டு மே தின தனிச் சிறப்­பு­மிக்க சேவை விருது அவ­ருக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

என்­டி­யு­சி­யில் வகித்து வரும் பத­வியைக் கைவிட்­டு­விட்டு அர­சாங்­கச் சேவைக்கு முழு நேர­மா­கத் திரும்­பும்­படி இப்­போது மூத்த சுகா­தார துணை அமைச்­ச­ராக இருக்­கும் டாக்­டர் கோ போ கூனை தான் கேட்டுக்கொண்டு இருப்­ப­தாக என்­டி­யுசி தலை­வர் திரு­வாட்டி லியூ­வுக்கு எழு­திய கடி­தத்­தில் பிர­த­மர் திரு லீ குறிப்­பிட்டு உள்­ளார்.

என்­டி­யுசி மத்­திய குழு இந்த வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொண்டு இருக்­கிறது. டாக்­டர் கோ, 49, மனி­த­வள அமைச்­சின் மூத்த துணை அமைச்­ச­ராக பொறுப்­பேற்­கி­றார். டாக்­டர் கோ 2018ல் என்­டி­யுசி துணை தலை­மைச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

அவர் என்­டி­யு­சிக்­கும் மசெக அர­சுக்­கும் இடைப்­பட்ட அணுக்­க­மான உற­வைப் பலப்­ப­டுத்தி இருப்­ப­தாக திரு லீ தனது கடி­தத்­தில் குறிப்­பிட்டு உள்­ளார்.

மனி­த­வள அமைச்­சில், குறிப்­பாக ஊழி­யர்­கள் பயிற்சி தொடர்­பில் அனு­ப­வம் பெற்­றி­ருக்­கும் ஒரு­வர், தொழிற்­சங்க இயக்­கத்­தில் பொறுப்­பேற்­பது மிக­வும் நல்­லது என்று திரு லீ நேற்று தெரி­வித்­தார்.

இத­னி­டையே, டாக்­டர் கோ என்டி­யுசி தலை­மைத்­துவ குழு­வின் ஒரு முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்து வந்­தி­ருக்­கி­றார் என்­பதை என்டியுசி தலைவி திரு­வாட்டி லியூ சுட்­டி­னார்.