ஆசியான் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் லீ

ஆசியான் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் லீ

2 mins read
71506f77-8f4e-4c14-a590-62eb519ad48e
-

மியன்­மார் நில­வ­ரம் குறித்து உரை­யாட ஜகார்த்­தா­வில் இன்று நடைபெறும் ஆசி­யான் தலை­வர்­

க­ளின் கூட்­டத்­தில் பிர­த­மர் லீ பங்­கேற்க இருக்­கி­றார்.

ஆசி­யான் அமைப்­பிற்கு இந்த ஆண்டு தலை­மை­ தாங்­கும் புருணை ஏற்­பாடு செய்­துள்ள

இந்­தக் கூட்­டம், கொவிட்-19

கொள்­ளை­நோய்த் தாக்­கத்­துக்­குப் பிறகு தலை­வர்­கள் நேர­டி­யா­கப் பங்­கேற்­கும் முதல் கூட்­டம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தக் கூட்­டத்­தில் ஆசி­யான் தலை­வர்­கள் எண்­மர் பங்­கேற்­பர். பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்­டேக்கு பதி­லாக அந்­நாட்டு வெளி­யு­றவு விவ­கா­ரச் செய­லா­ளர் டிரோ­டோரோ லோசின் ஜூனி­யர் பங்­கேற்­பார். தாய்­லாந்து பிர­த­மர் பிர­யூத் சான்-ஓ-சாவுக்­குப் பதி­லாக அந்­நாட்டு துணைப் பிர­த­ம­ரும் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான டான் பிர­முத்­வினை பங்­கேற்­பார்.

மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் இந்த மாநாட்­டில் பங்­கேற்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த பிப்­ர­வரி மாதம் முதல் தேதி மியன்­மா­ரில் ராணு­வம் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட பிறகு அவர் மேற்­கொள்­ளும் முதல் வெளி­நாட்­டுப் பய­ணம் இது. மியன்­மா­ரில் ராணு­வம் பொறுப்­பேற்ற பிறகு நிகழ்ந்த ஆர்ப்­பாட்­டங்­களில் நூற்­றுக்­க­ணக்­

கா­னோர் உயி­ரி­ழந்­த­து­டன் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் சிறை­களில் அடைக்­கப்­பட்­ட­னர்.

"ஆசி­யான் மற்­றும் இந்த வட்­டா­ரத்­தில் அமைதி, நிலைத்­தன்மை மீதான கடு­மை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள மியன்­மார் நில­வ­ரம் குறித்து ஆசி­யான் தலை­வர்­கள் விவா­திப்­பர்," என சிங்­கப்­பூ­ரின் பிர­த­மர் அலு­வ­லக அறிக்கை நேற்று தெரி­வித்­தது.

மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங்கை இந்­தக் கூட்­டத்­துக்கு அழைக்­கும் முடிவு மியன்­மார் ராணு­வத் தலை­வ­ருக்கு சட்­ட­பூர்வ அங்­கீ­கா­ரம் கொடுக்­கும் விதத்தில் இருப்பதாக இதை மியன்­மார் மக்­கள் புரிந்­து­கொண்­ட­தால், அழைப்புக்கு அங்கு பெரும் எதிர்ப்புக் கிளம்­பி­யது.

அனைத்­து­லக அங்­கீ­கா­ரம் அளிக்­கும் வித­மாக இந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்க தங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கு­மாறு திரு­வாட்டி ஆங் சான் சூச்­சி­யின் கட்­சி­யைச் சேர்ந்த, தேர்­த­லில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தேசிய ஒரு­மைப்­பாட்டு அர­சாங்­கம் கோரி­யது.

சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­கள் மியன்­மா­ரில் வன்­மு­றை­யைக் கைவி­டும்­படி கோரி­யி­ருந்த நிலை­யில், பொது­மக்­கள் மீது வன்­மு­றை­யைக் கட்­ட­விழ்த்து வி­டு­வதை நிறுத்த வேண்­டும் என ராணு­வத்தை சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கேட்­டுக்­கொண்­ட­து­டன் திரு­வாட்டி ஆங் சான் சூச்சி­யை­யும் விடு­விக்க வேண்­டு­மெ­னக் கோரி­னார்.

ஜகார்த்­தா­வுக்­கான இந்­தப் பய­ணத்­தில் பிர­த­ம­ரு­டன் டாக்­டர் விவியன் பால­கி­ருஷ்­ணன், அவ­ரது அமைச்­ச­கத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரும் செல்­கின்றனர். பிர­த­மர் இங்கு இல்­லா­த­போது தேசிய பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரும் மூத்த அமைச்­ச­ரு­மான திரு டியோ சீ ஹியன் தற்­கா­லிக பிர­த­ம­ரா­கச் செயல்­ப­டு­வார்.