வர்த்தகம் சரிவர நடக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் இருக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த குறைந்த ஊதிய ஊழியர்களுக்கு உதவ நேற்று $4 மில்லியன் நிதி வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஒரு மில்லியன் வெள்ளியையும் அரசாங்கம் 3 மில்லியன் வெள்ளியையும் அந்த நிதியில் சேர்த்துள்ளன.
அத்தகைய குறைந்த ஊதிய ஊழியர்கள் புதிய வேலையைத் தேடும்போதும் சமுதாய உதவிக்காகக் காத்திருக்கும்போதும்
உதவுவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய கால நிவாரண நிதியில் இந்தத் தொகை சேர்க்கப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதிலிருந்து இத்தகைய ஊழியர்கள் இரு மாத ஊதியம் வரையிலான நிதி ஆதரவைப் (அதிகபட்சம் $4,600) பெற முடிந்தது.
சம்மேளனத்தின் 40வது ஆண்டு நிறைவை ஒட்டி ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்
தோசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சம்மேளனத்தின் தலைவர் ராபர்ட் யப் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். "வேலையின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தல்: விரைந்து செயல்படும் முதலாளிகள், மீள்தன்மைகொண்ட ஊழியர்கள்' என்ற கருப்பொருளைக் கொண்ட அந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பங்கேற்றார்.
கொவிட்-19க்குப் பிந்திய சூழலில் வாழ்நாள் முழுவதும் ஊழியர்களால் வேலையில் இருக்க முடிவது, நிறுவனங்கள் நீடித்து நிலைத்திருப்பது போன்றவற்றை விரிவுபடுத்த முதலாளிகள், ஊழியர்களிடையே வலுவான பிணைப்பு இருப்பது அவசியம் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
ஊழியர்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்துறை உருமாற்ற வரைபடத் திட்டத்தின் மூலம் நிறுவனங்கள் ஊழியர்
களின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கின்றன என்றார் அவர்.
வேலை மறுவடிவமைப்பு, மாற்றுத் திறன் உருவாக்கம், பல்
கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

