சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக இன்று பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 61, 036க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாடுகளில் கிருமி தொற்றியவர்கள். சிங்கப்பூருக்கு வந்தவுடன் இவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூக அளவில் எந்தக் கிருமித்தொற்றும் இன்று அறிவிக்கப்படவில்லை. மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்...

