மாதந்தோறும் துப்புரவு நாள் பொது இடங்களின் தூய்மைக்கு பொதுமக்கள் பொறுப்பு ஏற்க மேலும் முயற்சிகள்

மாதந்தோறும் துப்புரவு நாள் பொது இடங்களின் தூய்மைக்கு பொதுமக்கள் பொறுப்பு ஏற்க மேலும் முயற்சிகள்

2 mins read
72bf9b8a-3068-4fb6-bcea-e5d2749f3542
எஸ்ஜி துப்புரவு நாள் இப்போது ஆண்டுக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. படம்: ஷின் மின் -

சிங்­கப்­பூ­ரில் பொது இடங்­க­ளின் தூய்­மைக்­கும் துப்­பு­ர­வுக்­கும் பொது­மக்­கள் பொறுப்பு எடுத்­துக் கொள்ள அதிக முயற்­சி­கள் இடம்­பெற இருக்­கின்­றன.

'எஸ்ஜி துப்­பு­ரவு நாள்' இயக்­கம் அடுத்த ஆண்டு முதல் மாதா­மா­தம் இடம்­பெ­றும் நிகழ்ச்­சி­யாக ஆகக்­கூ­டும் என்று தெரி­கிறது. அந்த நிகழ்ச்­சி­யில் நகர மன்­றங்­கள் எல்­லாம் பங்­கெ­டுத்­துக்­கொள்­ளும்.

எஸ்ஜி துப்­பு­ரவு நாள் செயல்­திட்­டம் இப்­போது ஆண்­டுக்கு ஒரு முறை இடம்­பெ­று­கிறது. இதை இந்த ஆண்­டில் காலாண்டு நிகழ்ச்­சி­யாக்கி பிறகு 2022ல் மாதா­மா­தம் இடம்­பெ­றும் இயக்­க­மாக ஆக்­கும் நோக்­கத்­து­டன் பொது துப்­பு­ரவு மன்­றம் இப்­போது நகர மன்­றங்­களு­டன் பேச்சு நடத்தி வரு­கிறது.

இந்த மன்­றம் 'சிங்­கப்­பூ­ரைத் துய்­மை­யாக வைத்­தி­ருப்­போம்' என்ற ஓர் இயக்­கத்தை ஆண்டு தோறும் நடத்தி வரு­கிறது.

அந்த ஒரு மாதகால இயக்­கம் நேற்று தொடங்­கி­யது. அதில் கலந்து­கொண்ட இந்த மன்­றத்­தின் தலை­வர் எட்­வர்ட் டி சில்வா இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார்.

நீடித்­த­ நி­லைத்­தன்மை, சுற்றுப்புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்­றைய நிகழ்ச்­சி­யில் பேசி­னார். பொது சுகா­தார மிரட்­டல்­களுக்கு எதி­ரான அரண்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வ­தில் ஒவ்­வொருவருக்­கும் முக்­கிய பணி இருக்­கிறது என்று அமைச்­சர் வலி­யு­றுத்­திக் கூறி­னார். கொவிட்-19 தொற்று இதை நன்கு உணர்த்தி இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி முதல் 30,000க்கும் மேற்­பட்ட இடங்­கள் எஸ்ஜி தூய்­மைத் தர முத்­தி­ரையைப் பெற்று இருப்­பது தனக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

பயன்­ப­டுத்­திய கை துடைப்பு தாட்­கள், முகக்கவசங்­கள் ஆகி­ய­வற்றை முறை­யாக அப்­பு­றப்­ப­டுத்­தும்படி பொதுமக்­களை அமைச்சர் வலி­யு­றுத்தினார்.

இந்த ஆண்­டின் முத­லா­வது எஸ்ஜி துப்­பு­ரவு நாளும் நேற்று தொடங்­கி­யது. இதில் முதல்­முறை யாக 17 நகர மன்­றங்­களும் ஈடு­பட்­டன. இதை நிரந்­த­ர­மாக்­கும் திட்­டங்­களும் இருப்­ப­தாக இந்த மன்­றம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரைத் தூய்­மை­யாக வைத்­தி­ருப்­போம் என்ற ஒரு மாத கால இயக்­கத்­தின் பகு­தி­யாக பல திட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன.

1,000 தொண்­டூ­ழி­யர்­கள் கலந்து­கொள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­படும் அக்­கம்­பக்க துப்­பு­ரவு நிகழ்ச்சி அவற்­றில் ஒன்று. இதில் 'ஹாபி­டேட் ஃபார் ஹுயு­மா­னிட்டி' என்ற லாப நோக்­கற்ற அமைப்பு ஈடு­படும்.

இத­னி­டையே, மக்­க­ளின் மனப்­போக்கை மாற்றுவதே மிகப்­பெ­ரும் சவா­லாக இருக்­கிறது என்று திரு டி சில்வா கூறி­னார்.

பல ஆண்­டு­கா­லம் போதித்து வந்­தா­லும் குப்­பை போடு­வது, சாப்­பிட்­டு­விட்டு தட்­டு­களை உரிய இடங்­களில் கொண்டு வைக்­கா­மல் போவது, அசுத்­த­மான பொதுக் கழி­வ­றை­கள் போன்ற கெட்ட பழக்­கங்­கள் இன்­ன­மும் தொடர்­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.