பணிப்பெண்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய வீடுகளுக்கே நேரில் செல்லும் அதிகாரிகள்

பணிப்பெண்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய வீடுகளுக்கே நேரில் செல்லும் அதிகாரிகள்

2 mins read
5052ada8-0d03-4af4-bf15-fd4f3b215556
புதிய திட்டத்தின்கீழ், மனிதவள அமைச்சால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று பணிப்பெண்களையும் அவர்களின் முதலாளிகளையும் சந்திப்பர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனி­த­வள அமைச்­சால் நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரி­கள் வீடு­க­ளுக்கு நேரில் வந்து சோதனை நடத்­து­வர் என்­ப­தால் முத­லா­ளி­கள் தங்­களை முறை­யாக நடத்­து­கி­றார்­களா என்­பதை உறு­தி­செய்­வ­தில் வெளி­நாட்டுப் பணிப்­பெண்­க­ளுக்கு அதிக உதவி கிடைக்­கும்.

இம்­மா­தம் 5ஆம் தேதி தொடங்­கப்­பட்ட புதிய திட்­டத்­தின்­கீழ், அதி­கா­ரி­கள் வீடு­க­ளுக்கே வந்து பணிப்­பெண்­க­ளை­யும் அவர்­க­ளின் முத­லா­ளி­க­ளை­யும் சந்­திப்­பர். அப்­போது, பாது­காப்­பான வேலை­யி­டச் சூழல் குறித்­தும் பணிப்­பெண்­க­ளுக்கு உதவி தேவைப்­பட்­டால் எவ்­வ­ழி­களில் அத­னைப் பெற­லாம் என்­பதை­யும் அவர்­கள் எடுத்­து­ரைப்­பர்.

இல்ல வரு­கை­யின்­போது பணிப்­பெண்­க­ளின் வசிப்­பிட, பணி­யி­டச் சூழ­லை­யும் அதி­கா­ரி­கள் சோதனை செய்­வர். மாதந்­தோ­றும் இப்­படி 200 வீடு­களுக்­குச் சென்­று­வர இலக்கு கொண்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சில நேரங்­களில் மர­ணத்­திற்கு இட்­டுச்­செல்­லும் வகை­யி­லும் பணிப்­பெண்­கள் துன்­பு­றுத்­தப்­படும் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றதை அடுத்து, இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

வாய்­மொ­ழி­யா­கச் சொல்­லா­விடி­னும் வேறு வகை குறிப்­பு­கள் மூலம் விதி­மீ­றல்­கள் அல்­லது நியா­ய­மற்ற வேலை­யி­டச் சூழ­லைக் கண்­ட­றி­யும் வகை­யில் அந்த அதி­கா­ரி­களுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டு உள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­தது. அப்­படி ஏதே­னும் தெரி­ய­வந்­தால் பின்­னர் அமைச்சு தலை­யி­டும். பணிப்­பெண் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது தெரி­ய­வந்­தால் போலி­சி­டம் தக­வல் தெரி­விக்­கப்­படும்.

இல்ல வரு­கைத் திட்­டத்­து­டன், முதல்­முறை வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளுக்­கான தனிப்­பட்ட நேர்­கா­ணல் திட்­டத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக இல்­லப் பணிப்­பெண்­களுக்­கான மையத்­து­டன் அமைச்சு இணைந்து செயல்­பட்டு வரு­கிறது. அப்­போது தங்­க­ளது கவ­லை­க­ளை­யும் பிரச்­சி­னை­க­ளை­யும் பணிப்­பெண்­கள் தெரி­விக்­க­லாம்.

கடந்த 2017ஆம் ஆண்­டில் இருந்து முதன்­முறை பணிப்­பெண்­களில் அங்­கொ­ரு­வர் இங்­கொ­ரு­வரா­கத் தேர்வு செய்து, இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்­கான மையம் அவர்­க­ளு­டன் தனிப்­பட்ட நேர்­காணல்­களை நடத்தி வரு­கிறது. அந்­தப் பணிப்­பெண்­கள் வேலை செய்­யத் தொடங்கி மூன்று முதல் ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு தனிப்­பட்ட நேர்­கா­ணல்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக இப்­போது அத்­த­கைய நேர்­கா­ணல்­கள் காணொளி வழி­யாக நடத்­தப்­பட்­டன. இந்­நி­லை­யில், அம்­மை­யத்­தின் அலு­வ­ல­கத்­திற்­குப் பணிப்­பெண்­கள் நேரில் சென்று, நேர்­கா­ண­லில் பங்­கு­பெ­று­வது அடுத்த மாதத்­தி­லி­ருந்து மீண்­டும் தொடங்­கப்பட­வுள்­ளது. இவ்­வாண்டு இறு­திக்­குள் முதன்­முறை பணிப்­பெண்­கள் அனை­வரி­டமும் தனிப்­பட்ட நேர்­கா­ணல்­களை நடத்­தும் வகை­யில் அத்­திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும். மாதத்­திற்கு 2,000 பணிப்­பெண்­களை நேர்­காண அம்­மை­யம் இலக்கு கொண்­டிருக்கிறது.