சமூகத்தில் ஒருவர், விடுதிவாசி ஒருவர் உட்பட 45 பேர் பாதிப்பு

சமூகத்தில் ஒருவர், விடுதிவாசி ஒருவர் உட்பட 45 பேர் பாதிப்பு

1 mins read
d3e79f5a-0500-4bf6-8dc7-1e8053d01635
-

சமூக அள­வில் ஒரு­வர், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் ஒரு­வர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 45 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திசெய்யப்­பட்­டுள்­ளது.

எஞ்­சிய 43 பேரும் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­கள் இங்கு வந்­த­தும் வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அந்த 43 பேரில் 13 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் என்று சுகா­தார அமைச்சு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூ­ரில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அவர்­கள் அனை­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் இரு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள், பத்­துப் பேர் நிரந்­த­ர­வா­சி­கள், அறு­வர் இல்­லப் பணிப்­பெண்­கள். நான்கு முதல் ஒன்­பது வய­துக்­குட்­பட்ட சிறார் ஐவ­ரும் அந்த 40 பேரில் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை 61,051 பேரை கொரோனா தொற்­றி­விட்ட நிலை­யில், நேற்று முன்­தின நில­வரப்­படி அவர்­களில் 60,647 பேர் குணமடைந்துவிட்டனர்.