தாய்மொழி கற்றலுக்கு $30 மில்லியன் ஆதரவு

தாய்மொழி கற்றலுக்கு $30 மில்லியன் ஆதரவு

2 mins read
01a6d20e-d808-41e7-a528-90e464563e2b
-

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தமிழ், சீனம், மலாய் மொழிகளின் கற்­ற­லை­யும் பயன்­பாட்­டை­யும் ஊக்கு­விக்­கும் வகை­யில் அம்மூன்று மொழிகளின் கற்­றல் வளர்ச்­சிக் குழுக்­க­ளுக்கு அடுத்த ஐந்­து ஆண்டு­களில் $30 மில்­லி­யன் நிதி ஆத­ரவை கல்வி அமைச்சு வழங்­க­ இருக்கிறது.

ஹுவா சோங் கல்வி நிலை­யத்­தில் கடந்த வாரம் நடந்த இலக்­கி­யம் தொடர்­பான நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் இதனை அறி­வித்­தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் தாய்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழுக்­களுக்­கு இந்த நிதி ஆத­ரவு $25 மில்­லி­ய­னாக இருந்­தது.

வகுப்­ப­றைக்கு அப்­பால் தாய்­மொ­ழி­க­ளின் பயன்­பாட்டை ஊக்கு­விக்க உத­வும் பள்­ளி­க­ளின் முயற்சி களுக்கு தமிழ், சீனம், மலாய் ஆகிய தாய்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழுக்­க­ளின் ஆத­ரவு பக்­க­ப­ல­மாக விளங்­கும். இந்த புதிய $30 மி. நிதி ஆத­ரவால் தாய்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழுக்­கள் இதர பங்­காளி­க­ளு­டன் சேர்ந்து பல­த­ரப்­பட்ட திட்­டங்­க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் தொடர்ந்து மேற்­கொள்­ள­லாம்.

தற்­போது நடந்­து­வ­ரும் தமிழ் மொழி விழா­வில் வளர்­த­மிழ் இயக்­கத்­து­டன் இணைந்து கல்வி அமைச்­சின் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு, இளை­யர்­க­ளுக்­கும் சிறார்களுக்கும் இலக்­கி­யம், பேச்­சாற்றல், கலா­சா­ரம் சார்ந்த பல­தரப்­பட்ட நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து வரு­கிறது.

தமிழ்­மொ­ழியை அர­வ­ணைத்து தங்­க­ளது அன்­றாட வாழ்க்­கை­யில் பயன்­ப­டுத்த ஊக்­கு­விப்­பது இந்­த­நி­கழ்ச்­சி­க­ளின் நோக்­க­மா­கும்.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வு­டன் இணைந்து தமிழ்­மொழி தொடர்­பான நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­யும் பங்­கா­ளி­க­ளுக்­கும் இந்த கூடு­தல் நிதி ஆத­ரவு குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தன.

தமிழ்­மொ­ழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் பங்­கா­ளித்­துவ அமைப்பு களில் ஒன்­றான தமிழ் முரசு நாளி­தழின் இணை ஆசி­ரி­யர் வீ.பழனிச்­சாமி கூறுகையில், "ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் நல்­லா­சி­ரி­யர் விருது வழங்­கும் விழா­விற்கு தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு, சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம், தமிழ் முரசு ஆகி­யவை இணைந்து ஏற்­பாடு செய்து வரு­கின்­றன.

"தகுதிபெற்ற நல்­லா­சி­ரி­யர்­களை முறை­யா­கத் தேர்வு செய்து அவர்­களுக்கு விருது வழங்கி, கௌர­விக்க வேண்­டும் என்ற விழா ஏற்­பாட்­டுக் குழு­வின் நோக்­கத்­திற்கு தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வும் அதன் செய­லவை உறுப்­பி­னர்­களும் பெரும் துணை­யாக இருந்து வருகின்றனர்.

"கல்வி அமைச்சு வழங்­கும் கூடு­தல் நிதி ஆத­ர­வின் மூலம் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு அதன் பணி­களை இன்­னும் செம்­மை­யாகச் செய்ய முடி­யும்," என்­று சொன்னார்.

"தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஏற்­பாடு செய்­யும் நட­வடிக்­கை­களில் மாண­வர்­கள் ஆர்­வ­மாகப் பங்­கேற்று, கற்றதை வகுப்­பறை­யில் செயல்­ப­டுத்­தும்போது மனத்தை நெகி­ழச் செய்­கிறது," என்று கூறி­னார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் ­பள்ளி தமிழாசி­ரி­யை திருமதி அ.மஹாலெஷ்மி.