நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்த இரண்டு பிரபல சந்தை
களிலும் சமூக இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அங்கு கூடுதல் அதிகாரிகள் நிறுத்தப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் வாரியம் கூறியது.
சந்தைகளில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதை அதிகாரிகள் தடுப்பர் என்று வாரியம் கூறியது.
பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் சந்தையின் தரையில் குறியீடுகள் இருக்கும்.
கடைகளுக்கு வெளியே விற்பனைப் பொருட்களை வைக்க வேண்டாம் என கடைக்காரர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதால் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிப்பது சிரமமாகிவிடும் என்று வாரியம் தெரிவித்தது.
கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் கடந்த ஆண்டு நடை
முறைப்படுத்தப்பட்டபோது நுழைவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நான்கு பிரபல சந்தைகளில் கேலாங் சிராய் சந்தையும் அடங்கும்.
தங்கள் அடையாள அட்டை எண்ணின் கடைசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு
ஒற்றைப்படை அல்லது இரட்டைப்
படைத் தேதிகளில் வாடிக்கை
யாளர்களுக்குச் சந்தைக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தளர்த்தப்பட்டது.
ஆனால் சந்தைக்குள் அனு
மதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கான அதிகபட்ச வரம்பு தொடர்ந்து நடப்பில் உள்ளது.
கேலாங் சிராய் சந்தையில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 300 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேக்கா சந்தையில் அதிகபட்சம் 200 வாடிக்கையாளர்கள் அனுமதிப்படுவர்.
"இந்தப் பிரபலமான சந்தை
களுக்குள் செல்வதற்குக் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க வேண்டும்," என்று வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
தோராயமான காத்திருப்பு நேரத்தைக் குறிக்கும் பலகைகள் சந்தையின் நுழைவாயிலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

