அமைச்சர் கிரேஸ் ஃபூ: அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் மூதாட்டியிடம் பரிவும் சகிப்புத்தன்மையும் காட்டுங்கள்

அமைச்சர் கிரேஸ் ஃபூ: அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் மூதாட்டியிடம் பரிவும் சகிப்புத்தன்மையும் காட்டுங்கள்

3 mins read
1c47fff5-3e7c-4323-8f57-96e4fbd02a64
ஜூரோங் ஈஸ்டில் தாம் வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் திருவாட்டி செல்லம்மா (மேல்படம்), தனது வீடு இருக்கும் மூன்றாவது மாடிக்கு வெளியேயும் அண்டை வீட்டாரின் வீடுகளுக்கு வெளியையும் அவற்றை வைத்துள்ளார் (கீழ் படம்). இதனால் அவரது அண்டை வீட்டார் ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றத்திடம் புகார் அளித்தனர். படங்கள்: சாவ் பாவ் -
multi-img1 of 2

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கின் பொதுத் தாழ்­வா­ரத்­தில் 80 வய­து­களில் உள்ள ஒரு மூதாட்டி அட்­டைப் பெட்­டி­க­ளைச் சேக­ரித்து வைத்­தி­ருக்­கும் செயலால் அங்கு தீ மூளும் அபா­யம் அதி­க­ரித்­தி­ருக்­கிறது என்று அவ­ரது அண்டை வீட்­டாரைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 24ல் உள்ள புளோக் 252ல் வசிக்­கும் திரு­வாட்டி செல்­லம்மா எனும் அந்த முதி­ய­வர் கடந்த சுமார் பத்து

ஆண்­டு­க­ளாக இச்­செ­ய­லைப் புரிந்து வரு­கி­றார்.

அவர் வசிக்­கும் இடத்­தைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லி­ருந்து அட்­டைப் பெட்­டி­க­ளைச் சேக­ரித்து அவற்றை விற்று, அதி­லி­ருந்து கிடைக்­கும் பணத்தை தனது கைச்­செ­ல­வுக்­காக வைத்­துக்­கொள்­கி­றார்.

"நான் செய்­வ­தற்கு என்ன வேலை உள்­ளது? நான் வீட்­டி­லேயே இருந்­தால் எனது செல­வுக்­கான பணத்தை யார் கொடுப்­பார்­கள்?" என்று திரு­வாட்டி செல்­லம்மா, தமி­ழில் த நியூ பேப்­பர் செய்­தித் தாளி­டம் கூறி­னார்.

அவ்­வாறு அவர் சேக­ரிக்­கும் அட்­டைப் பெட்­டி­களை அவர் தனது வீட்­டின் பொதுத் தாழ்­வா­ரத்­தி­லும் படிக்­கட்­டு­க­ளி­லும் அடுக்கி வைக்­கி­றார்.

இது குறித்து கருத்­து­ரைத்த, வேறோர் இடத்­தில் வசிக்­கும் அந்த முதி­ய­வ­ரின் உற­வி­னர் ஒரு­வர், "அட்­டைப் பெட்­டி­களை வீட்­டுக்கு வெளியே அடுக்கி வைத்­தி­ருப்­பது ஒரு பிரச்­சி­னை­யாகி இருக்­காது. முன்பு அந்­தப் பெட்­டி­களை ஒரு 'காராங்­கோனி'யிடம் (பழைய பொருட்­களை வாங்கி, சிறிது பணம் கொடுப்­ப­வர்) அடிக்­கடி விற்று விடு­வார். அதற்­கான பண­மும் அவ­ருக்­குக் கிடைத்து வந்­தது. ஆனால், இவ்­வாண்டு சீனப் புத்­தாண்­டுக்­குப் பிறகு அந்த 'காராங்­கோனி' நபர் வரு­வ­தில்லை," என்­றார்.

முதி­ய­வ­ரின் அட்டை வீட்­டா­ரில் ஒரு­வ­ரான 49 வயது திரு ரம்லி, "இந்­தப் அட்­டைப் பெட்­டி­களில் எளி­தில் தீப்­பி­டிக்க வாய்ப்­புள்ளது. யாரா­வது ஒரு­வர் எரி­யும் சிக­ரெட் துண்டை அதன் மீது வீசி­னால் போதும். அது பெரும் தீச்­சம்­ப­வத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டும்," என்று கவ­லைப்­பட்­டார்.

லியன்ஹ சாவ்­பாவ் சீன மொழி நாளி­த­ழி­டம் பேசிய சில சீன குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்கு சில அட்­டைப் பெட்­டி­களில் தீப்­பி­டித்­தது என்­றும் ஆனால், அது உட­ன­டி­யாக அணைக்­கப்­பட்டு விட்­டது என்­றும் தெரி­வித்­த­னர். லியன்ஹ சாவ்­பாவ் செய்­தி­யின் தொடர்­பில் பதி­ல­ளித்த நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, "குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் கவ­லையை நான் புரிந்­து­கொள்­கி­றேன். அந்த முதி­ய­வ­ரி­டம் பரி­வும் சகிப்­புத்­தன்­மை­யும் காட்­டுங்­கள்.

"ஜூரோங்-கிள­மெண்டி நகர மன்­றம் திரு­வாட்டி செல்­லம்­மா­வுக்கு பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக அர­சாங்க உத­வித் திட்­டங்­கள், நிதி மற்­றும் உணவு வழங்­கீ­டு­கள் மூலம் உதவி வழங்கி வரு­கிறது.

"அட்­டைப் பெட்டி விவ­கா­ரம் குறித்து ஜூரோங்-கிள­மெண்டி நகர மன்­றம் திரு­வாட்டி செல்­லம்­மா­வு­டன் இணைந்து நீண்­ட­காலத் தீர்வு காண முயன்று வரு­கிறது. அவ­ரது நல்­வாழ்­வும் சமூ­கத்­தின் பாது­காப்­பும் நிச்­ச­ய­மா­கக் கட்­டிக்­காக்­கப்­படும்," என்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார்.

அமைச்­சர் ஃபூ, யூஹுவா தனித்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­வார்.

"பிழைப்­புக்­கா­கத்­தான் திரு­வாட்டி செல்­லம்மா அட்­டைப் பெட்டி களைச் சேக­ரிக்க வேண்­டும் என்­ப­தில்லை. அவ­ருக்கு குடும்ப உறுப்­பி­னர்­களும் சமூக அமைப்­பு­களும் நிதி ஆத­ரவு வழங்கி வரு­கின்­ற­னர்.

"அட்­டைப் பெட்­டி­க­ளைச் சேக­ரித்து அவற்றை வீட்­டுக்கு வெளியே வைக்க வேண்­டாம் என்று நாங்­கள் பல­முறை அவ­ரி­டம் கூறி­யுள்­ளோம். ஆனால் அவர் கேட்­ப­தாக இல்லை. ஒன்­றும் செய்­யா­மல் வீட்­டில் இருக்க தன்­னால் முடி­யாது என்று அவர் கூறு­கி­றார்," என்று திரு­வாட்டி செல்­லம்­மா­வின் உற­வி­னர் தெரி­வித்­தார்.

கழிவு சேக­ரிப்பு குத்­த­கை­யா­ள­ரு­டன் சேர்ந்து திரு­வாட்டி செல்­லம்மா பணி­யாற்­ற­லாம் என்ற அமைச்­சர் ஃபூ கூறிய யோசனை அவ்­வாறு செய்ய அந்த முதி­ய­வரை ஊக்­கப்­ப­டுத்­த­லாம் என்­றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர்.

அந்த முதி­ய­வ­ருக்கு மூன்று மாதங்­க­ளுக்கு ஒருமுறை முதி­யோ­ருக்கான ஆத­ர­வுத் திட்­டம் மூலம் உதவி கிடைத்து வரு­கிறது என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.