சீனாவின் வூஹான் மாநிலத்தில் உருவானதாகக் கூறப்படும் கொவிட்-19 தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் தங்கள் உற்றார் உறவினரை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.
சிங்கப்பூரின் கெம்பங்கானில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த செல்வி ஷுபாதா மிஷ்ரா, நிதித்துறை தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அதிகாலை உறக்கத்தில் இருந்து கண்விழித்ததுமே, முதல் வேலையாக ஹைதராபாத் நகரில் வாழும் தன் வருங்காலக் கணவர் திரு ஸக்வான் கானின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கைத்தொலைபேசி வழியாகத் தெரிந்துகொள்வதுதான் என்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திரு கான், ஒரு நீரிழிவு நோயாளி, அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறார்.
ஏனெனில், பெருகி வரும் கொவிட்-19 நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். புதிய நோயாளிகள் படுக்கை வசதியின்றி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இது பெரும் அச்சத்தைத் தந்துள்ளதாக தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார் செல்வி ஷுபாதா மிஷ்ரா.
பேரழிவைத் தரும் வகையில் கொவிட்-19 தொற்று இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் செல்வி மிஸ்ராவைப் போல சிங்கப்பூரில் இந்தியர்கள் பலர், இந்தியாவில் வாழும் தங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி கடந்த சில நாட்களாகக் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
செல்வி மிஸ்ராவின் வருங்கால கணவர் திரு கானின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திரு கான் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். அவரை அவ்வப்போது கவனித்துக்கொள்ளும் நண்பரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தொற்றுக்கு ஆளான பக்கத்து வீட்டுக்காரரால் திரு கானுக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நாள்தோறும் தன்னை வாட்டுவதாகவும் மனஇறுக்கத்திற்கு ஆளாக்குவதாகவும் கூறுகிறார் செல்வி மிஸ்ரா.
குமாரி பார்கவா, "இந்தக் கொரோனா எங்களை துயரப் படுகுழியில் தள்ளிவிட்டது. எங்கோ வாழும் எங்கள் குடும்பத்தினரை நினைத்து வாடும்போது மரணம், துன்பம் என திகில் கதைகளைப் படிப்பதைப் போன்று உணர்கிறேன். தினமும் அச்சத்தால் என் ஆன்மாவின் ஒரு பகுதி உயிரிழந்து வருவதைப்போல் உணர்கிறேன் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் இதுவரை 17.31 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

