தற்காப்பு உறவுகளை மறுஉறுதி செய்துகொண்ட சிங்கப்பூர், மலேசியா

தற்காப்பு உறவுகளை மறுஉறுதி செய்துகொண்ட சிங்கப்பூர், மலேசியா

2 mins read
cce0e027-eb49-4272-86b4-dc280d5c6e79
தற்காப்பு அமைச்சர்இங் எங் ஹென்(இடது), மலேசியத்தற்காப்பு அமைச்சர்இஸ்மாயில் சப்ரியாக்கோப். படம்: தற்காப்பு அமைச்சு -

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், மலே­சி­யத் தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இரு­வ­ரும் நேற்று தங்­கள் முத­லாவது இரு­த­ரப்பு கூட்­டத்­தில் காணொளி வழி­யா­கச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

அப்­போது அவர்­கள் சிங்­கப்­பூருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான வலு­வான தற்­காப்பு உறவை மறு­உ­று­திப்­ப­டுத்­திக் கொண்­ட­து­டன், 50 ஆண்டு நிறைவை நாடும் ஐந்து நாட்­டுத் தற்­காப்பு ஏற்­பாட்­டுத் திட்­டத்­துக்­குத் தங்­க­ளின் ஆத­ர­வைத் தெரி­வித்­துக்­கொண்­டனர்.

ஐந்து நாட்­டுத் தற்­காப்பு ஏற்­பாட்­டுத் திட்­டத்­தில் அங்­கம் வகிக்­கும் ஐந்து நாடு­கள் பங்­கேற்­கும் முழு அள­வி­லான பெர்­சாமா லீமா பயிற்சி நடை­பெ­று­வதை கொவிட்-19 நிலைமை தடுத்­தி­ருந்­தா­லும், இவ்­வாண்டு சிறிய அள­வி­லான பயிற்சி நடத்­தப்­படும். இது, பாது­காப்பு ஏற்­பாட்­டுக்கு ஐந்து நாடு­களும் கொண்­டுள்ள வலு­வான கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தும் அறி­குறி­யாக கரு­தப்­ப­டு­கிறது.

ஐந்து நாட்­டுத் தற்­காப்பு ஏற்­பாட்­டுத் திட்­டத்­தில் சிங்­கப்­பூர், மலே­சியா தவிர, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து, பிரிட்­டன் ஆகி­யவை இடம்­பெற்­றுள்­ளன.

நேற்று சந்­தித்த இரு நாட்டு அமைச்­சர்­களும் தங்­கள் ஆயு­தப்­படை­க­ளுக்­கி­டையே இருந்­து­வ­ரும் தற்­காப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்தி, கட்­டிக்­காக்க தங்­கள் நாடு­க­ளின் கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­னர் என்று சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

"இரு ஆயு­தப்­ப­டை­களும், கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் நிலைமை மேம்­பட்­ட­வு­டன், இரு­த­ரப்பு, பல­த­ரப்பு தற்­காப்பு ஈடு­பா­டு­க­ளை­யும் பயிற்­சி­க­ளை­யும் மீண்­டும் தொடங்க உறுதி தெரி­வித்­தன," என்று அமைச்­சின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பொது­வான பாது­காப்­புச் சவால்­கள், குறிப்­பாக, பயங்­க­ர­வா­தம், இணை­யப் பாது­காப்பு, கடல்­து­றைப் பாது­காப்பு ஆகி­யவை பற்­றி­யும் இரு தற்­காப்பு அமைச்­சர்­களும் பேசி­னர். எல்லை தாண்­டிய மிரட்­டல்­களை எவ்­வாறு முறி­ய­டிப்­பது என்­பது பற்­றி­யும் விவா­தித்த அமைச்­சர்­கள், அவற்றை எதிர்­கொள்ள மற்ற வட்­டார நாடு­க­ளு­டன் ஒத்­து­ழைப்­ப­தன் மூலம் அதை சாதிக்­க­லாம் என்­றும் கூறி­னர்.

ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டம் (எடி­எம்­எம்) மற்­றும் ஆசி­யா­னின் பத்து நாடு­கள், எட்டு கலந்­து­ரை­யா­டல் பங்­கா­ளி­கள் (எடி­எம்­எம் பிளஸ்) ஆகிய தளங்­கள் மூலம் வட்­டார நாடு­களை ஒன்­றி­ணைக்­க­லாம் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

பெர்­சாமா லீமா பயிற்சி கடந்த முறை 2019 அக்­டோ­ப­ரில் நடந்­தது. அதை மலே­சியா ஏற்று நடத்­தி­யது. அதில் ஐந்து நாடு­க­ளின் 3,000 ராணு­வப் படை வீரர்­கள் பங்­கேற்­ற­னர். அந்த 17 நாள் பயிற்சி­யில் வழக்­க­மான போர் பயிற்­சி­கள், கடல்­துறை பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள், மனி­தா­பி­மான உதவி மற்­றும் பேரி­டர் நிவா­ர­ணப் பணி­கள் ஆகி­யவை­யும் இடம்­பெற்­றன.

நேற்­றைய சந்­திப்­பில் டாக்­டர் இங், அமைச்­சர் இஸ்­மா­யிலை ஜூன் மாதம் நடை­பெ­றும் 19வது ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் மாநாட்­டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுத்­தார். அது அமைச்­சர் இஸ்­மா­யில் சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொள்­ளும் முத­லா­வது அதி­கா­ரத்­துவ பய­ண­மா­க­வும் விளங்­கும்.