முதல் காலாண்டு வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம்

முதல் காலாண்டு வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம்

3 mins read
e1b7b270-4635-46ce-8e90-0c476ba6bfdd
-

ஊழியர் சந்தை நிலவரம் குறித்து மனிதவள அமைச்சின் முன்னோட்ட அறிக்கை

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லின் தாக்­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் வேலைச் சந்தை இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்­க­ளாக மீட்சி அடைந்து வரு­கிறது. நோய்ப்­ப­ர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து முதன்­மு­றை­யாக இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வேலை­வாய்ப்­பு­கள் முன்­னேற்­றம் அடைந்­துள்­ளன.

தக­வல் தொடர்பு, நிதிச் சேவை­கள், நிபு­ணத்­துவ சேவை­கள் உள்­ளிட்ட சேவைத் துறை­கள் அதி­க­மா­னோரை வேலை­யில் அமர்த்­தியது.

கட்­டு­மா­னத் துறை­யி­லும் வேலை வாய்ப்­பு­கள் சற்­றுக் கூடி­யது. உற்­பத்­தித் துறை­யில் வேலைவாய்ப்பு­கள் தொடர்்ந்து சரி­வையே கண்­டன. ஒட்­டு­மொத்­த­மாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் வேலை­வாய்ப்பு மித­மான முன்­னேற்­றம் கண்­டது. குடி­யி­ருப்­பா­ளர் அல்­லா­தோ­ருக்­கான வேலை­வாய்ப்­பு­கள் எல்­லாத் துறை­களி­லும் சரி­வைக் கண்­டது.

வேலைச் சந்தை நில­வ­ரம் குறித்து மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட முன்­னோட்ட அறிக்கை இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

​ஊழி­யர் சந்தை மீட்­சி­ய­டைந்து வரு­வ­தில் இது ஒரு "குறிப்­பி­டத்­தக்க திருப்­பம்" என்று என்­டி­யுசி கற்­றல் மையத்­திற்கு நேற்று வரு­கை­ய­ளித்த மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறி­னார்.

"முத­லா­ளி­க­ளி­டையே நம்­பிக்கை ஏற்­பட்டு, அது தொடர்ந்து வளர்ந்து வரு­வதை இது காட்­டு­கிறது," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, இங்­குள்ள வேலை­யின்மை, கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் 3.5 விழுக்­கா­டாக உயர்ந்­தது. அது தொடர்ந்து குறைந்து வந்­தா­லும், தொற்­று­நோய்க்கு முந்­தைய நிலை­யை­விட அதி­க­மா­கவே உள்­ளது.

மார்ச் மாதத்­தில் ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­தம் 2.9 விழுக்­கா­டாக இருக்­க­லாம் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டையே வேலை­யின்மை விகி­த­மும் ஜன­வரி மாதத்­தில் 4.3 விழுக்­காட்­டி­லி­ருந்து மார்ச் மாதத்­தில் 4 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. இத­னால், மார்ச் மாதத்­தில் வேலை­யில்­லாத குடி­யி­ருப்­பாளர்­க­ளின் எண்­ணிக்கை 95,500 ஆனது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே, வேலை­யில்­லா­தோர் விகி­தம் ஜன­வரி மாதத்­தில் 4.5 விழுக்­காட்­டி­லி­ருந்து மார்ச் மாதத்­தில் 4.2 விழுக்­காடாகக் குறைந்­தது.

2020ன் மூன்­றாம் காலாண்­டில் உச்­ச­நி­லைக்­குச் சென்­ற­பின், கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­தைய நிலைக்கு, ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து இரண்­டா­வது காலாண்­டா­கக் குறைந்து வரு­வதை­யும் அமைச்­சின் முன்­னோட்ட மதிப்­பீ­டு­கள் காட்­டு­கின்­றன.

இதே­போல், கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் 1,000 ஊழி­யர்­க­ளுக்கு 2.8 ஊழி­யர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­பட்ட அளவு குறைந்து, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 1,000 ஊழி­யர்­க­ளுக்கு 1.1 ஊழி­யர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

எனி­னும், தொடர்ச்­சி­யான மறு­சீ­ர­மைப்பு, வர்த்­த­கங்­கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­வது கார­ண­மாக வேலை மாற்­றங்­கள் தொடர்ந்து இடம்­பெ­ற­லாம் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

முதற்­கட்ட மதிப்­பீ­டு­கள் பரந்த அடிப்­ப­டை­யி­லான மீட்சி, ஊக்­க­மளிக்­கும் அறி­கு­றி­க­ளைக் காட்­டு­கின்­றன என்­றா­லும், ஊழி­யர் சந்தை இன்­னும் கொவிட்-19க்கு முந்­தைய நிலை­மைக்கு முழு­மை­யாக திரும்­ப­வில்லை என்று அமைச்­சின் அறிக்கை சுட்­டி­யது.

"தொடர்ச்­சி­யான பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளின் விளை­வாக, கட்­டு­மா­னம், விருந்­தோம்­பல் போன்ற துறை­களில் பணி­ய­மர்த்­தல் குறை­கிறது. வேலை­யின்மை விகி­தங்­கள் குறைந்­துள்­ளன என்­றா­லும் தொற்று­நோய்க்கு முன்­பை­விட அதி­க­மாகவே உள்­ளது" என்று அது கூறி­யது.

வொர்க் பாஸ் அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளின் வரு­கையை பாதிக்­கும் பய­ணக் கட்­டுப்­பா­டு­களால் ஊழி­யர் சந்தை தொடர்ந்து சவால்­களை எதிர்­கொள்­ளும். மேலும் வர்த்­தக மாற்­றங்­க­ளின் விளை­வாக வேலை­களை மாற்­று­வ­தா­லும் சவால்­கள் தொட­ரும்.

நிறு­வ­னங்­க­ளி­டம் நடத்­தப்­பட்டு வரும் கருத்­துக்­க­ணிப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில், வர்த்­தக மனப்­போக்கு பொது­வாக நம்­பிக்­கை­யா­ன­தாக இருப்­ப­தாக அமைச்சு தெரி­வித்­தது. மார்ச் மாதத்­தில், கருத்­துக்­க­ணிப்­பில் பங்­கேற்ற நிறு­வ­னங்­களில் 73% வேலைக்கு ஆட்­களை எடுக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறின. இந்த அளவு கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் 65% ஆக இருந்­தது.

டிசம்­ப­ரில் 2.8 விழுக்­கா­டாக இருந்த ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க விரும்­பும் நிறு­வனங்­க­ளின் விகி­தம் 2.2 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. அதே நேரத்­தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு 2.8 விழுக்­கா­டாக இருந்த சம்­பளத்­தைக் குறைக்­க­வுள்­ள­தா­கக் கூறிய நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை 3.4 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக, வர்த்­தக மறு­சீ­ர­மைப்­பின் விளை­வாக புதிய திறன்­கள் தேவைப்­படும் வேலை­க­ளுக்கு உள்­ளூர் மக்­களை பணி­ய­மர்த்­து­வது குறித்து அதி­க­மான முத­லா­ளி­கள் பரி­சீ­லித்து வரு­வ­தாக அமைச்­சர் டியோ குறிப்­பிட்­டார்.

என்­டி­யுசி கற்­றல் நிலை­யம் வழங்­கும் வகுப்­பு­கள் மூலம் புதிய திறன்­க­ளைப் பெறு­மாறு வேலை தேடு­ப­வர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.