சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நட
வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை 5,500க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்
களுக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று கூறியது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ்
தங்குவிடுதியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ்
தங்குவிடுதியில் வசிக்கும் 26 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் இருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இல்லை என்று பிறகு உறுதி செய்யப்பட்டது. 11 பேரிடமிருந்து கொவிட்-19 கிருமி பரவும் அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தங்குவிடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்
படுவதுடன் கூடுதலாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் இதுவரை பாதிப்படையாத ஊழியர்களுக்கும் ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு குணம் அடைந்த ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்களில் பாதிக்கப்பட்டுள்ள
தங்குவிடுதிகளில் தங்குபவர்களும் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும்
அடங்குவர்.
சுகாதார அமைச்சு, கட்டட,
கட்டுமான ஆணையம், பொருளியல் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மனிதவள அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
இதற்கிடையே, கொரோனா
விலிருந்து குணமடைந்த ஊழியர்
களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்காது என்றும் முந்திய பாதிப்பின் காரணமாக அவர்களது உடலுக்குள் சிறிதளவு கொவிட்-19 கிருமி இருக்கக்கூடும் என்று மனிதவள அமைச்சு கூறியது. அது உண்மையாக இருந்தால் அவர்
களிடமிருந்து கிருமி பரவும் அபாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
"இது புதிதாக ஏற்பட்ட கிருமிப் பரவல் அல்ல. பழைய கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு. எனவே பதற்றம் அடையத் தேவையில்லை," என்று மனிதவள அமைச்சின் மருத்துவ இயக்குநர் டாக்டர் லாம் மெங் சோன் தெரிவித்தார்.

