குறைந்த வருமான குடும்பங்
களுக்கு மின்னிலக்கத் திறன்
களைக் கற்பிக்க 'மின்னிலக்க
முறைக்குத் தயாராக இருக்கும் குடும்பங்கள்' திட்டம் உதவுகிறது.
இந்த அறிமுகத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை முதன்முதலில் நடைபெற்றது. குடும்ப வருமானம் தலா ஒருவருக்கு $650க்கும் குறைவாக இருக்கும் 16 குடும்பங்
களுக்கு முதலில் உதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து பங்கெடுத்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
திட்டத்தில் பங்கெடுத்த பிறகு தங்கள் பிள்ளைகள் மின்னிலக்க சாதனங்களைப் பயன்படுத்தும்போது தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க, தகுந்த விளக்கங்
களைத் தர முடிந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
மின்னிலக்கப் பயிற்சி பெற்று பிள்ளைகளுக்குப் புரியும் வகையில் சரியான விளக்கத்தை பெற்றோரால் அளிக்க முடிவதால் அவர்கள் கூறுவதைக் கேட்டு பிள்ளைகள் அதன்படி நடந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மின்னிலக்கச்
சாதனப் பயன்பாடு தொடர்பில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருந்த விரிசல்கள் குறைந்திருப்பதாக 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த பயிற்சி இம்மாதம் தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது. இதில் 44 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் நிதிதிரட்டு நிகழ்ச்சியான அதிபர் சவால் 2021 ஆதரவு வழங்குகிறது.
ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களும் நிதியுதவி அல்லது தொண்டூழியம் மூலம் ஆதரவு வழங்குகின்றன.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற 'டச்' குடும்ப மாநாட்டில் திட்டத்தின் சின்னம் அறிமுகப்
படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் 400க்கும் மேற்பட்டோர் இதில் பங்கெடுக்கின்றனர். குடும்பங்களுக்கு ஏற்படும் மனவுளைச்சல்களுக்கான காரணங்கள், குடும்ப மீள்திறன் போன்றவற்றில் மாநாடு கவனம் செலுத்துகிறது. இணையம் வழி தொல்லை விளைவிக்கும் பிரச்சினை, கொவிட்-19 நெருக்கடி
நிலையின்போது திருமணமான பெண்களுக்கு ஏற்படும் மன
உளைச்சல் போன்ற விவகாரங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் நேற்று கலந்துகொண்டார்.
'ஒவ்வொரு குடும்பத்தின் மனதில்' என்ற கருப்பொருளுடன் மாநாடு நடத்தப்பட்டது.
உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க தனியார், அரசாங்கத் துறைகள் ஒன்றிணைவது மகிழ்ச்சியைத் தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

