எம்ஆர்டி ரயிலில் சக பயணிக்கு எதிராக இனவாத கருத்துகளைத் தெரிவித்த பெண்ணுக்குச் சொந்தமான யூடியூப் ஒளிவழி முடக்கப்
பட்டுள்ளது.
தொல்லை விளைவித்தல், இணையம்வழி தொந்தரவு கொடுத்தல் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டதால் ஒளிவழி முடக்கப்பட்டதாக யூடியூப் நேற்று தெரிவித்தது.
"யூடியூப் தளத்தைப் பயன்
படுத்தி பிறருக்குத் தொல்லை விளைவிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையான நட
வடிக்கைகளை எடுப்போம்.
"இனம், பாலினம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்கும் இது பொருந்தும். இத்தகைய காணொளிகள் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்படும்போது அவற்றை உடனடியாக
நீக்கிவிடுவோம்," என்று யூடியூப் கூறியது.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த எம்ஆர்டி ரயிலில் பெண் ஒருவர் சக பயணியை இனரீதியாக தூற்றும் காணொளி இம்மாதம் 21ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. இனவாதக் கருத்துகளைத் தெரிவித்தவரே காணொளியைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படு
கிறது.

