தென்தீவுகளைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்

தென்தீவுகளைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்

2 mins read
f8152ccf-e73b-44cf-ad8e-27779ac2fb64
செரிங்­காட், கியாஸ், லசா­ரஸ், செயிண்ட் ஜான், குரு, தெக்­கு­கோர் ஆகிய தென்­தீ­வு­கள் இந்த ஆளில்­லாத விமா­னம் மூலம் கண்காணிக்­கப்­படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் நில ஆணை­யம் ஆளில்லா விமா­னம் மூலம் தென் தீவு­களில் சோதனை மேற்­கொள்­ளும் தனது திட்­டத்­தைக் கடந்த வாரம் தொடங்­கி­யது.

செரிங்­காட் தீவில் இருந்து அந்­தத் தீவை­யும் அதன் சுற்­று­வட்­டா­ரத்­தை­யும் அதி­கா­ரி­கள் இந்த விமா­னம் மூலம் கண்­கா­ணிப்­பர்.

செரிங்­காட், கியாஸ், லசா­ரஸ், செயிண்ட் ஜான், குரு, தெக்­கு­கோர் ஆகிய தென்­தீ­வு­கள் இந்த ஆளில்­லாத விமா­னம் மூலம் கண்­கா­ணிக்­கப்­படும். இந்த ஆளில்லா விமா­னக் கண்­கா­ணிப்பும் சோதனையும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் அந்­தத் தீவு­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று கண்­கா­ணிக்­கும் தேவை மூன்று மடங்கு குறைக்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. ஆளில்லா விமா­னம் மூலம் தென்­தீ­வு­க­ளைக் கண்­கா­ணி க்­கும் நடை­மு­றை­யைச் சாத்­தி­யப்­ ப­டுத்­து­வ­தற்­கான சோத­னை­கள் 2018ஆம் ஆண்டு தொடங்­கி­ன.

அந்த ஆளில்லா விமா­னம் மூலம் அனுப்­பப்­படும் காணொ­ளி­கள், கணினி மூலம் ஆய்­வு­செய்­யப்­படும். அதன் முடி­வு­களில் தெரியவரும் பாது­காப்பு மற்­றும் பரா­ம­ரிப்பு தொடர்­பான பிரச்­சி­னை­கள் மற்­றும் குப்­பை­கள் போடப்­பட்­டி­ருப்­பது, அத்­தீ­வு­களில் உள்ள கட்­ட­டங்­க­ளுக்­குச் சேதம் விளை­விக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­படும் என்று ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஆளில்லா விமா­னச் சோதனை நட­வ­டிக்­கை­யால், நில ஆணை­யத்­தின் நில மேம்­பாட்டு மற்­றும் சொத்து நிர்­வா­கத்­து­றை­யில் உள்ள சுமார் 10 அதி­கா­ரி­கள், தங்­கள் நேரத்தை மற்ற பொறுப்­பு­க­ளுக்­குச் செல­வி­டு­வர் என்று அந்­தத் துறைக்­குத் தலைமை வகிக்­கும் திரு வின்­செண்ட் ஆவ் கூறி­னார்.

இனி அதி­கா­ரி­கள் இந்­தத் தீவு­களில் வாரம் இரு­முறை சென்று சோதனை மேற்­கொண்­டால் போதும். முன்பு அதி­கா­ரி­கள் வாரத்­திற்கு நான்கு, ஐந்து முறை சோதனை நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

இந்­தத் தீவு­க­ளின் மொத்த பரப்­ப­ள­வை­யும் கண்­கா­ணிக்க மொத்­தம் 29 ஆளில்லா விமா­னங்­கள் தேவைப்­ப­டு­கிறது.

2022 ஏப்­ரல் மாதத்­திற்­குள் மேலும் இரண்டு தீவுப் பகு­தி­க­ளைக் கண்­கா­ணிக்க இரண்­டா­வது ஆளில்லா விமா­னங்­க­ளைப் பயன்­ ப­டுத்த ஆணை­யம் திட்­ட­மிட்­டுள்­ளது. ஹந்து புசார் மற்­றும் ஹந்து கெச்­சில் ஆகி­யவை அந்­தத் தீவு­கள். இந்­தத் தீவு­கள் செரிங்­காட் தீவில் இருந்து 10 கி.மீ. தொலை­வில் உள்­ளன. இந்­தத் தீவு­களில் சூரி­யத் தகடு மின்­சக்­தி­யால் இயங்­கக்­கூ­டிய ஆளில்லா விமா­னம் கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தும் வழி­மு­றை­களை ஆணை­யம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு ஆவ் தெரி­வித்­தார்.