சிங்கப்பூரின் ஆகப் பழமை வாய்ந்த பள்ளிவாசல்களில் ஒன்றான கதிஜா பள்ளிவாசலிலும் சமய மறுவாழ்வுக் குழுவின் வளநிலையத்திலும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. சமூகத்திற்கு மேலும் சிறப்பாக சேவையாற்ற இப்பணிகள் நடைபெறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது.
வெளிப்புறக் காட்சிக்கூடம், பல்நோக்கு மண்டபம், புதிய நுழைவாயில், விருந்து உபசரிப்பு பகுதி போன்ற பல்வேறு மேம்பாடுகள் அமையவுள்ளன.
புதுப்பிப்பு தொடர்பில் நேற்று அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.
சமய மறுவாழ்வுக் குழுவின் பணிகளில் பள்ளிவாசலின் பெரும் பங்கு மற்றும் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மையை ஏற்படுத்துவதில் குழுவின் முக்கிய பங்கு ஆகியவற்றை அவர் கோடிட்டார்.

