தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை ஒதுக்க பரிசீலனை

2 mins read
01e12292-5258-4897-acae-615e41b234ee
-

நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் (பிஎம்இ) ஆகிய பிரி­வி­ன­ருக்­குக் கைகொ­டுக்­கும் முயற்­சி­களில் ஒரு பகு­தி­யாக, அவர்­

க­ளுக்கு குறிப்­பிட்ட சில வேலை­களை ஒதுக்­கு­வது உள்­ளிட்ட நடை­மு­றை­கள் கருத்­தில் கொள்­ளப்­ப­டு­வ­தாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் தெரி­வித்­துள்­ளார்.

'என்­டி­யுசி இன்­கம்' என்­று அழைக்­கப்­படும் தனது காப்­பு­றுதி நிறு­வ­னம் மூலம் வேலை­யில்லா தோருக்கு ஒரு­வகை காப்­பு­று­தித் திட்­டம் ஒன்றை அமைக்க என்­டி­யுசி யோசித்து வரு­வ­தாக திரு இங் நேற்று கூறி­னார்.

நியா­ய­மான பரி­சீ­லனை ஏற்­பாட்­டை­யும் இதர அர­சாங்­கக் கொள்­கை­க­ளை­யும் இன்­னும் சிறந்த முறை­யில் செயல்­ப­டுத்த மனி­த­வள நிபு­ணர்­க­ளு­டன் சேர்ந்து அணுக்­க­மா­கப் பணி­யாற்­ற­லாம் என்று என்­டி­யுசி நம்­பு­கிறது.

பிஎம்இ பணிக்­குழு கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் அமைக்­கப்­பட்­டது.

இது­வரை 8,000 பிஎம்இ ஊழி­யர்­க­ளி­டம் அது ஆய்­வு­கள், கலந்­து­ரை­யா­டல்­கள் ஆகி­யவை மூலம் தொடர்­பு­கொண்­டுள்­ளது.

பிஎம்இ ஊழி­யர்­க­ளுக்கு எவ்­வாறு கூடு­தல் ஆத­ரவு வழங்­க­லாம் என்­பது குறித்த பரிந்­து­ரை­களை இவ்­வாண்டு இறு­திக்­குள் அர­சாங்­கத்­தி­டம் சமர்ப்­பிக்க பணிக்­குழு இலக்கு கொண்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ருக்கு நல்ல மதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தலை­சி­றந்த ஆற்­றல் உள்­ள­வர்­களை நாம் இழந்து விட­வில்லை என்­பதை மிக­வும் கவ­ன­மான முறை­யில் நாம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

"அதே­நே­ரத்­தில், நம் உள்­ளூர் ஊழி­யர்­க­ளை­யும் நாம் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். இந்த சம­நிலையைக் காண்­பது சிர­ம­மான ஒன்று. ஆனா­லும் அதைச் சாதிக்க நாம் பாடு­பட வேண்­டும் என்­றார் திரு இங்.

இந்­நி­லை­யில், மனி­த­வள நிபு­ணர்­களும் இணைந்து வேலை தொடர்­பான கட்­ட­மைப்­பை­யு­ம்

அர­சாங்­கத்­தின் மற்ற கொள்­கை­

க­ளை­யும் மேலும் சிறந்த முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்த என்­டி­யுசி விரும்­பு­வ­தாக திரு இங் தெரி­வித்­தார்.

வேலை தொடர்­பான கட்­ட­மைப்­பில் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

பார­பட்­ச­முள்ள வேலை நிய­மன அணு­கு­மு­றை­க­ளைக் கையா­ளும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக மேலும் கடு­மை­யான தண்­டனை விதிப்­ப­தும் அவற்­றில் அடங்­கும்.

இந்த அம்­சங்­களை நடை­

மு­றைப்­ப­டுத்த மனி­த­வள நிபு­ணர்­க­ளு­டன் இணைந்து செயல்­பட விரும்­பு­வ­தாக திரு இங் கூறி­னார்.

முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­

க­ளுக்­கும் சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­து­வதே முக்­கி­யம் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஆனால் பிஎம்இ ஊழி­யர்­களை என்­டி­யுசி பிர­தி­நி­திக்­க­வும் அவர் க­ளுக்­காக குரல் கொடுக்­க­வும் வேண்­டு­மென்­றால் அவர்­களில் மேலும் பலர் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளாக வேண்­டும் என்­றார் திரு இங்.

ஆய்வு ஒன்­றில் பங்­கெ­டுத்த 1,000 பிஎம்இ ஊழி­யர்­களில் 88 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்­கும் அமைப்பு ஒன்று வேண்­டும் என்று விருப்­பம் தெரி­வித்­த­னர். ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­களில் 75 விழுக்­காட்­டி­னர் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­கள் அல்­லா­த­வர்­கள்.