அதிபர்: வேலையிடச் சூழல் மாறிவிட்டது

அதிபர்: வேலையிடச் சூழல் மாறிவிட்டது

1 mins read
f0f7b9f4-7dca-4c7c-974a-2cb1090b59e2
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை வேலை­யி­டச் சூழலை வெகு­வாக மாற்­றி­யி­ருப்­ப­தா­க­வும் ஊழி­யர்­

க­ளுக்குப் புதிய வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தா­க­வும் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது மே தினச் செய்­தி­யில் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் இந்த வாய்ப்­பு­கள் நிலைத்­தி­ருக்க ஊழியர் தொடர்­பான கொள்­கை­களில் மாற்­றங்­

க­ளைக் கொண்டு வரும் தேவை ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அணு­கு­மு­றை­யால் பெண்­க­ளுக்­குக் கூடு­தல் தெரி­வு­கள் இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

வேலைக்­குச் செல்­வதா அல்­லது வீட்­டில் இருந்து பிள்­ளை

­க­ளைப் பார்த்­துக்­கொள்­வதா என்ற குழப்­பம் அவர்­க­ளுக்கு இனி இருக்­காது என்­றார் அவர்.

"மற்ற ஊழி­யர்­க­ளை­விட வித்­தி­யா­ச­மாக இருப்­ப­தாக உடற்­

கு­றை­யுள்ள ஊழி­யர்­களும் இனி கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை," என்று அதி­பர் கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் கடந்த ஆண்டு மே தினத்தை வழக்­க­மான முறை­யில் அனு­ச­ரிக்க முடி­யா­மல் போனதை

அதி­பர் நினை­வு­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 தடுப்­பூசி போடும் திட்­டம் சுமு­க­மாக நடப்­ப­தா­க­வும் தொடர்ந்து மூன்று காலாண்­டு­க­ளாக வீழ்ச்­சி­யைக் கண்ட பிறகு, இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி கண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யி­லும் சிங்­கப்­பூர் தொடர்ந்து வெற்­றி­நடை போட மனந்தளராது அய­ராத உழைத்த சிங்­கப்­பூ­ரர்­

க­ளுக்கு அதி­பர் ஹலிமா தமது மனமார்ந்த நன்­றி­யைத் தெரி­

வித்­துக்­கொண்­டார்.