ஊழியர்களின் மனவலிமையைப் பலப்படுத்துவது முக்கியம்

ஊழியர்களின் மனவலிமையைப் பலப்படுத்துவது முக்கியம்

3 mins read
4ed994a8-85d0-474e-92bf-c71c7aeb1f80
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக கடந்த ஆண்டு ஊழி­யர்­கள் பல­ருக்கு வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் நிலை ஏற்­பட்­டது. அதன் கார­ண­மாக சில­ருக்கு வேலை-வாழ்க்கை சம­நிலை பாதிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

வீட்­டி­யி­லி­ருந்து வேலை செய்­யும்­போது அன்­றைய பணி­களை எப்­போது முடித்­துக்­கொள்­வது என்று தெரி­யா­மல் ஊழி­யர்­கள் சிலர் தவித்தது தெரி­ய­வந்­தது.

இது அவர்­க­ளது தனிப்­பட்ட வாழ்க்­கை­யைப் பாதித்து மன­உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது.

எனவே ஊழி­யர்­க­ளின் மன­

வ­லி­மை­யைப் பலப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்­பதை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அணு­கு­முறை காட்­டி­யி­ருப்­ப­தாக மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

நேற்று நடை­பெற்ற தேசிய வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார இயக்­கத்­தின் அறி­முக விழா­வில் இது­கு­றித்து அவர் பேசி­னார். ஜூரோங்­கில் உள்ள வர்த்­த­கச் சங்க மையத்­தில் நடை­பெற்ற அறி­முக விழா இணை­யத்­தில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

"ஊழி­யர்­கள் தங்­கள் உடல்­

ந­லத்தை மட்­டு­மின்றி மன­ந­லத்­தை­யும் பேணிக் காக்க வேண்­டும்," என்று திரு ஸாக்கி வலி­யு­றுத்­தி­னார்.

ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்த இயக்­கத்­துக்கு வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் ஏற்­பாடு செய்­தது. வேலை­யி­டங்­களில் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் மேம்­ப­டுத்த இயக்­கம் இலக்கு கொண்­டுள்­ளது. ஊழி­யர்­க­ளின் மன­வ­லி­மையை அதி­க­ரிக்க வரும் செப்­டம்­பர் மாதத்­தில் புதிய இயக்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அதில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் அமைப்­பு­களும் சிறந்த

அணு­கு­மு­றை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள இருக்­கின்­றன.

வேலை­யி­டங்­களில் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் மேம்­ப­டுத்த நிறு­வ­னங்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு தொடர்ந்து ஆத­ர­வுக் கரம் நீட்­டும் என்­றார் திரு ஸாக்கி.

மன­ந­லம் தொடர்­பான பயி­ல­ரங்­கு­கள், இணை­யப்­பக்­கங்­கள் ஆகி­ய­வற்றை வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் அறி­மு­கப்­ப­டுத்­தும்.

மன­ந­லம் தொடர்­பான முத்­த­ரப்பு விருது அடுத்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். சிறந்த அணு­கு­ மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் தனி­ந­பர்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் அடை­யா­ளம் காட்ட இந்த விருது வழங்­கப்­படும்.

வேலை­யி­டங்­களில் பாது­காப்­புக்­கும் சுகா­தா­ரத்­துக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் வகை­யில் இடை­வேளை எடுத்­துக்­கொள்­ளும்­படி முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அது அரை மணி நேரம் அல்­லது அதற்கு மேல் இருக்­க­லாம்.

அந்த நேரத்­தில் முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் ஓய்வு எடுத்­துக்­கொள்­ள­லாம் அல்­லது பாது­காப்­புச் சோத­னை­களை நடத்­திக்­கொள்­ள­லாம்.

"புதிய அணு­கு­மு­றை­களை அடிக்­கடி கடைப்­பி­டித்­தால் அது பழக்­க­மா­கி­வி­டும். அதன்­மூ­லம் ஊழி­யர்­க­ளின் ஆரோக்­கி­ய­

நி­லையை மேம்­ப­டுத்­த­லாம்.

"வேலை­யி­டத்­தில் இருக்­கும் பாது­காப்­பற்ற அம்­சங்­கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­படும் சாத்­தி­யம் அதி­க­ரிக்­கும்," என்று வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­தின் தலை­வர் ஜான் இங் தெரி­வித்­தார்.

வேலை­யி­டப் பாது­காப்பு தொடர்­பாக இவ்­வாண்­டில் மேலும் இரண்டு இயக்­கங்­கள் நடத்­தப்­படும். அண்­மைய ஆண்­டு­க­ளாக வேலை­யி­டங்­களில் மர­ணங்­களை விளை­விக்­காத காயங்­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான இரண்டு முக்­கிய கார­ணங்­களை அவை எதிர்­கொள்­ளும்.

அதிக ஆபத்து உள்ள துறை­க­ளுக்­காக இயக்­கம் ஒன்று நடத்­தப்­படும். உய­ர­மான இடங்­க­ளி­லி­ருந்து விழு­வது, தடுக்கி விழு­வது, வழுக்கி விழு­வது போன்­ற­வற்­றைத் தடுக்க வரும் ஜூன் மாதத்­தில் அந்த இயக்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் பாது­காப்­பான கைகள் இயக்­கத்தை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­

மி­டப்­பட்­டுள்­ளது. இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது விபத்­து­கள் நிக­ழா­மல் இருக்க தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்க நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­படும்.

ஊழி­யர்­க­ளைப் பயிற்­சி­க­ளுக்கு அனுப்­ப­வும் வேலை­யி­டச் செயல்­மு­றை­கள், அவ்­வப்­போது மறு­ஆய்வு செய்­ய­வும் இயந்­தி­ரங்­க­ளை­யும் சாத­னங்­க­ளை­யும் அடிக்­கடி சோதித்­துப் பார்க்­க­லும் முத­லா­ளி­க­ளுக்கு திரு ஸாக்கி அழைப்பு விடுத்­துள்­ளார்.