எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றை வழங்க அரசாங்கமும் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நேற்று நடைபெற்ற 'டச்' குடும்ப மாநாட்டில் சமூக, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் தெரிவித்தார்.
சீரான வருமானத்தைத் தரும் வேலை, குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது ஆகியவை குடும்பங்
களுக்குச் சீரான வாழ்க்கை
முறையை ஏற்படுத்துவதை மீள்
திறன்மிக்க குடும்பங்களை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் திருவாட்டி சுன் சுட்டினார்.
"இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகத் தோன்றலாம். ஆனால் எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்கு வேலைக்குச் செல்வதும் பள்ளிக்குச் செல்வதும் சவால்மிக்கதாக இருக்கலாம்," என்று கல்வி துணை அமைச்சருமான சுன் சூலிங் கூறினார்.
நிகழ்ச்சியின்போது குடும்ப மீள்திறன் பற்றி கலந்துரையாடப்பட்டது. மீள்திறனை அதிகரிக்க பெற்றொரின் பங்கு, குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வது, சவால்மிக்க காலகட்டங்களை எதிர்கொள்ள தேவையான குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சவால்மிக்க காலகட்டங்களைக் குடும்பங்கள் எதிர்கொள்ள அவர்களிடையிலான தொடர்பு, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள் ஆகியவை மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.
"ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாததாலும் தங்கள் கருத்து களை வெளிப்படையாகக் கூறும் பழக்கம் இல்லாததாலும் குடும்பங்களில் பிளவு ஏற்படுவதை சமூகச் சேவையில் ஈடுபடும்போது நாங்கள் பார்த்திருக்கிறோம். குடும்பங்களில் இத்தகைய சூழல்கள் ஏற்படுவதால் உறவுகள் முறிகின்றன," என்று கலந்துரையாடலை வழிநடத்திய 'டச்' ஒருகிணைக்கப்பட்ட குடும்பங்கள் குழுமத்தின் மூத்த இயக்குநர் திருமதி அனிதா லோ-லிம் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பது உறவை வலுப்
படுத்துவதற்கான முதல் படி என்றார் திருவாட்டி சுன்.