செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f76cd324-987c-444f-b2aa-90d5be82f2ca
-

20,000 பேரின் தகவல்கள்

கசிவு; $29,000 அபராதம்

இருதாயிரம் பேரின் தகவல்கள் ஊடுருவப்பட்டதால் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியை(Tafeb) மேற்பார்வையிடும் 'தால்' (Tal) எனும் முத்தரப்புக் கூட்டணி நிறுவனத்துக்கு 29,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் அத்துமீறி பெற்றதை 'தால்' தடுக்க தவறிவிட்டதாக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

ஊடுருவல்காரர்கள் ஊடுருவிய தரவுகளில் பெயர், அடையாள எண், தொடர்பு எண், மின் அஞ்சல், முகவரி, வயது, இனம், திருமண விவரம், சம்பளம், இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருந்தன.

வர்த்தக ரீதியிலான தொடர்பு விவரங்களும் இந்த ஊடுருவலில் கசிந்துவிட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.

நீதிமன்றத்துக்கு 3வது முறையாக

வராத ஓ.கே. லிம்

மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஹின் லியோங் டிரேடிங் நிறுவனர் லிம் ஊன் குயின் மூன்றாவது முறையாக நேற்று நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் மருத்துவ விடுப்பு பெற்றுள்ளதால் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஓ.கே. லிம் என்று பிரபலமாக அழைக்கப்படும் 79 வயது முன்னாள் எண்ெணய் நிறுவன தொழிலதிபர் நாட்பட்ட 'சைனசைடிஸ்ட்டிஸ்' பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணையை எதிர்நோக்கும் உடல் நிலையில் அவர் இல்லை என்று அவரது மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால் ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்தை எடுத்துவருவதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் அவர் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தவிந்தர் சிங் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் நவின் தேவர் கூறினார்.

மானபங்கம் செய்த ஓட்டுநர்

பெண் பய­ணியை மான­பங்­கம் செய்த வழக்­கில் டாக்சி ஓட்­டு­நர் குற்­ற­வாளி என்று விசா­ர­ணைக்­குப் பின்­னர் நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. ஹாஜி முகமது யூசூஃப், 56, பெண்ணை மான­பங்­கம் செய்த குற்­றச்­சாட்டை மறுத்து விசா­ர­ணைக்­குக் கோரி­யி­ருந்­தார்.

அப்­பர் பாய லேபார் சாலை அரு­கே­யுள்ள லோரோங் ஆ சூவில் 2019 ஜன­வரி 5ஆம் தேதி சம்­ப­வம் நடந்­தது. பாதிக்­கப்­பட்ட 30 வயது பெண்­ணின் பெயரை நீதி­மன்ற உத்­த­ர­வின் பேரில் வெளி­யிட முடி­யாது.

டாக்­சி­யில் ஏறிப பின்­னர் தூங்­கி­விட்­ட­தா­க­வும் எழுந்­த­போது யூசூஃப் தம்மை மான­பங்­கம் செய்­து­கொண்­டி­ருந்­த­தா­க­வும் அப்­பெண் கூறி­யி­ருந்­தார். கூச்­ச­லிட்ட தம்மை யூசூஃப் சற்று நேரத்­தில் இறக்­கி­விட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

ஆனால் யூசூஃப் அப்­பெண்­ணைத் தொட­வில்லை என்­றும் இடம் வந்­த­தும் அவ­ரைக் கூப்­பிட்டு எழுப்ப முயன்­ற­தா­க­வும் தமது வாதத்­தில் கூறி­னார்.

இரு வாதங்­க­ளை­யும் கேட்ட மாவட்ட நீதி­பதி ஜான் இங், பாதிக்­கப்­பட்ட பெண் உண்­மை­யான, தெளி­வான சாட்­சி­யத்தை அளித்­த­தாக நேற்­றைய தீர்ப்­பில் கூறி­னார். ஆனால் யூசூஃப் மழுப்­பி­ய­தாக தமக்கு தோன்­றி­யது என்­றார் நீதி­பதி.

யூசூ­ஃப்­புக்கு மே 17ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­படும். மான­பங்­கக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு இரண்­டாண்­டு­கள் வரை­யி­லான சிறை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது அனைத்தும் விதிக்­கப்­ப­ட­லாம். ஆனால் யூசூஃப் 50 வய­தைத் தாண்­டி­ய­வர் என்­ப­தால் அவ­ருக்கு பிரம்­படி விதிக்க முடி­யாது.