பற்றுச்சீட்டுகளைத் திருடிய மாதுக்குச் சிறை

பற்றுச்சீட்டுகளைத் திருடிய மாதுக்குச் சிறை

2 mins read
16951481-d99e-45cf-9818-efb19f2fd521
-

தமது கண­வ­ரு­டன் சேர்ந்து, 10,800 வெள்ளி மதிப்­புள்ள 2020 வரவு செல­வுத் திட்ட மளி­கைப் பொருள் பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டிய மாதுக்கு நேற்று 48 வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

டாண்டி யொஹய்டா சமாட், $2250 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தாக ஏற்­க­னவே 15 குற்­றச்­சாட்­டு­கள் போடப்­பட்­டன. மேலும் 57 குற்­றச்­சாட்­டு­கள் நேற்று கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஏற்­க­னவே வேறொரு குற்­றத்­துக்­காக தண்­டனை குறைப்பு மனுவில் 2019இல் விடு­விக்­கப்­பட்ட டாண்டி, நன்­ன­டத்தை கண்காணிப்பைத் தவ­றி­ய­தால் அவர் கூடு­த­லாக 121 நாட்­க­ளுக்கு சிறை­யில் இருக்க வேண்­டும்.

பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திருட டாண்டி, 45, திட்­டம் தீட்­டி­னார். விடு­விக்­கப்­பட்­டி­ருந்த காலத்­தில் அவர் தமது கண­வர் ஸுல்­கி­ஃப்லி முகமது யாத்­திம்முடன் கூட்­டு­சேர்ந்து அண்­டை­வீட்­டுக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­னார். அத­னால் மூத்த குடி­மக்­கள் உட்­பட, 72 பேர் பற்­றுச்­சீட்­டு­களை இழந்­த­னர்.

மார்­சி­லிங்­கில் வசித்த அத்­தம்­ப­தி­யி­னர், பின்­னி­ரவு நேரங்­களில் மற்ற குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் அஞ்­சல்­பெட்­டி­க­ளைத் தேடி­னர்.

மேல் மூடியை எளி­தா­கத் தூக்க முடிந்த அஞ்­சல் பெட்­டி­க­ளுக்­குள், துணி­க­ளைத் தொங்க வைக்­கும் கம்­பி­களை விட்டு பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்ட கடித உறை­களை எடுத்­த­னர். சில முறை, ஸுல்­கி­ஃப்லி குற­டு­க­ளால் அஞ்­சல்­பெட்­டி­களை உடைத்­துப் பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­னார்.

ஒவ்­வோர் உறை­யி­லும் $10 மதிப்­புள்ள 15 பற்­றுச்­சீட்­டு­கள் இருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது. பற்­றுச்­சீட்­டு­க­ளைக் காண­வில்லை என்று குறைந்­தது 19 பேர் போலி­ஸில் புகார் அளித்­ததால் குற்­றங்­கள் பற்றி தெரிய வந்­தது.

ஸுல்­கி­ஃப்­லிக்கு எதி­ரான வழக்கு இன்­னும் விசாரணைக்கு வரவில்லை.