நெருக்கடியான சமயத்தில் ஊழியர்களின் குரலாக ஒலித்தனர்

நெருக்கடியான சமயத்தில் ஊழியர்களின் குரலாக ஒலித்தனர்

2 mins read
ecae59ea-f27c-4bfc-957d-b7e280ac151b
மே தின விருது நிகழ்ச்சியில் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கிடமிருந்து சி. தமிழ்வாணன் விருது பெற்றுக்கொள்கிறார் படங்கள்: என்டியுசி -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

ஊழி­யர்­க­ளின் வாழ்க்­கை­யில் மாறு­தலை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற முனைப்­பு­டன் திரு சி. தமிழ்­ வாணன், திரு அ.மகேந்­தி­ரன் பல ஆண்­டு­க­ளுக்கு முன் ரசா­யன துறை­க­ளின் தொழிற்­சங்­கத்­தில் (CIEU) சேர்ந்­த­னர்.

இச்­சங்­கத்­தில் தற்­போது சுமார் 24,000 ஊழி­யர்­கள் இடம்­பெற்று உள்ளனர்.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை தொழி­லா­ளர்­க­ளின் வருடா ந்திர சம்­ப­ள பேச்­சு­வார்த்தை சந்­திப்பு தொடங்­கு­வ­தற்கு முன்பு ரசா­ ய­னத் துறை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து சம்­ப­ளம் தொடர்­பான தக­வல்­களை சேக­ரிப்­பர்.

தேசி­ய சம்­பள மன்­றம் வழி­காட்டி முறை­களை பின்­பற்­றி­ய­வாறு தொழிற்சங்க­ உறுப்­பி­னர்­க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைப்­ப­தற்கு தங்­க­ளு­டைய நிறு­வன நிர்­வா­கத்­து­டன் அவர்­கள் பேச்சுவார்த்தை நடத்­து­வர். நிர்­வா­கத்­து­டன் நட்­பு­றவை நிலை­நாட்டி, இவர்­கள் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு தற்­போ­தைய வேலைச் சந்­தைக்கு ஏற்ற சம்­பள உயர்­வை­யும் இதர வேலை­யிட சலு­கை­களும் பெற உதவி செய்­துள்­ள­னர்.

கடந்த ஆண்­டில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தாக்­கி­யபோது, அது ஒட்­டு­மொத்த ரசா­யன துறை யை பாதித்­தது, சில வேலை­யி­டங்­களில் ஆட்­கு­றைப்­பும் இடம்பெற்றது.

இத்­தொ­ழிற்­சங்­கத்­தில் இடம்­பெறுவோ­ரில் பலர் தொழில்­நுட்­பர்­க­ளாக பணி­யாற்­று­ப­வர்­கள்.

இந்த இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் தம் நிறு­வன நிர்­வா­கத்­து­டன் கலந்­து­பேசி கிடைக்­கும் வழக்­க­மான 'போனஸ்' தொகை­களை தவிர்த்து, $1,000 பெறு­மா­ன­முள்ள சிறப்பு 'போனஸ்' ஊழி­யர்­க­ளுக்கு கிடைக்க மூல கார­ண­மாக விளங்­கி­னார் ரசா­யன துறை­க­ளின் தொழில்சங்க துணை தலை­வர் திரு மகேந்­தி­ரன், 59.

மற்றொரு தொழிற்சங்கவாதியான சி. தமிழ்வாணன், 58, ஊழி­யர்­களின் ஒட்­டு­மொத்த நலனை நிலை­நாட்­டு­வதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளார்.

பெண் தொழில்நுட்பர் ஒருவர், இரண்டு பிள்ளைகளுடன் குடும்பத் துக்கு நேரத்தை ஒதுக்க சிரமப் பட்டார்.

சுமார் ஈராண்டுகளாக நிறுவன பிரிவுகளின் தலைவர்களிடம் பேசி, அப்பெண் ஊழியர் மாறுபட்ட வேலை நேரத்திலிருந்து வழக்கமான அலுவலக நேரத்தில் பணியாற்ற கடந்தாண்டு ஏற்பாடு செய்வதில் வெற்றி கண்டார் தொழிற்சங்கத்தின் உதவி பொது செயலாளரான சி. தமிழ்வாணன்.

ஒவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த பின்னணியில் இருந்து வரும் தொழிற்சங்க உறுப்பினர் களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்பு பொட்டலங் களை விநியோகிக்கும் திட்டத்தை வழிநடத்துகிறார் திரு மகேந்திரன்.

"ஒவ்வொரு முறையும் ஒரு ஊழியருக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்து அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது, மனதளவில் மிகுந்த திருப்தியை தருகிறது. இச்சேவையை ஒருபோதும் சுமை யாகக் கருதவில்லை, ஆயுள்வரை சேவையாற்ற கடப்பாடு கொண்டு உள்ளேன்," என்று தெரிவித்தார் திரு சி.தமிழ்வாணன்.

ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் இந்த தொழிற்சங்க வாதிகளுக்கு இவ்வாண்டின் மே தின விருது நிகழ்ச்சியில் 'தொழி லாளர் தோழர்' விருது கொடுக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டது.

இந்த மின்னிலக்க யுகத்தில், மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் வேலையிடத்தில் ஊழியர்கள் பின்தங்கிவிடாமல் இருக்க தொடர்ந்து தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.