கதைக்களத்தின் ஒன்பதாம் ஆண்டு நிகழ்வில் மலேசியாவின் பொன். கோகிலம்

கதைக்களத்தின் ஒன்பதாம் ஆண்டு நிகழ்வில் மலேசியாவின் பொன். கோகிலம்

2 mins read
fdf8ae1e-bad5-4b08-904b-e00b3227f4cd
-

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் மாதந்­தோ­றும் நடத்­தும் கதைக்­க­ளம், நாளை 9ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு இணை­யம் வழி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்ச்­சி­யில் மலே­சிய தமிழ் வானொலி இலக்­கிய நிகழ்ச்­சித் தயா­ரிப்­பா­ளர், எழுத்­தா­ளர், இயல் பதிப்­ப­கத்­தின் தோற்­று­நர் திரு­மதி பொன் கோகி­லம், 'வெண்­ப­லகை எழுத்­தா­ளர்­கள்' என்ற தலைப்­பில், சிறப்­புரை ஆற்­று­கி­றார்.

சிறு­கதை இலக்­கி­யத்தை மைய­மாகக் கொண்ட கதைக்­க­ளம் நிகழ்ச்சியில் போட்­டிக் கதை­க­ளின் கூறுக­ளைப் பற்றி கலந்­து­ரை­யா­ட­லாம்.

'ஸூம்' செயலி வழி நடை­பெறும் கதைக்­க­ளத்­தில் அனை­வ­ரும் கலந்து­கொண்டு பயன்­பெற வேண் டும் என்று சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் கேட்டுக்கொள்கிறது.

ZOOM Link: http://singaporetamilwriters.com/kathaikalamzoom/

ZOOM Meeting ID: 853 0120 6016

கதைக்­க­ளம் நிகழ்ச்சி 9ஆம் ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கிறது. வாசிப்பை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், 2021 மே மாதம் முதல், புதிய அங்­க­மாக நூல் அறி­மு­கப் போட்­டி­யைக் கதைக்­க­ளம் நடத்த உள்­ளது.

இதற்கு சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தி­லுள்ள நூல் ஒன்­றுக்கு 140 வார்த்­தை­க­ளுக்­குள் சுவா­ர­சி­ய­மான அறி­மு­கம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்­டும். இது­வரை நடத்­தப்­பட்டு வந்த சிறு­கதை விமர்­ச­னப் போட்­டிக்­குப் பதி­லாக நூல­றி­மு­கப் போட்டி இனி நடை­பெ­றும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கதைக்­க­ளத்­தில் எழுத்­துத் திறனை மேம்­ப­டுத்­தும் வகை­யில், சிறு­கதை எழு­தும் போட்டி மூன்று பிரி­வு­க­ளாக இடம்­பெற உள்­ளது.

மாண­வர் பிரிவில் உயர்­நிலை வகுப்பு மாண­வர்­கள் பங்கேற்பார்கள்.

"கும­ரனை அவங்க அம்மா பதற்­றத்­தோட தேடு­றாங்க" என்ற தொடக்க வரி­யில் 200 முதல் 300 வார்த்­தை­க­ளுக்­குள் சிறு­க­தையை எழுத வேண்­டும்.

இளை­யர் பிரிவில் தொடக்­கக் கல்­லூரி, பல்­க­லைக் கழக மாண­வர்­கள் பங்கேற்பர்.

"வேறு வழி­யில்லை, நடந்த உண்­மை­களை அவ­ரி­டம் சொல்­லத்­தான் போகி­றேன்" என்ற தொடக்க வரி­யில் 300 முதல் 400 வார்த்­தை­க­ளுக்­குள் சிறு­க­தையை எழுத வேண்­டும்.

பொதுப் பிரிவில் பங்கேற்போர், "வார­யி­றுதி நாட்­களில் என்னை வீட்­டில் பார்க்க முடி­யாது," என்ற தொடக்க வரி­யில் 400 முதல் 500 வார்த்­தை­க­ளுக்­குள் சிறு­க­தையை எழுத வேண்­டும்.

மேற்­கண்ட படைப்­பு­க­ளைக் கணி­னி­யில் அச்­சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்­னி­யல் படி­வத்­தின் வழி­யாக 28/5/2021 வெள்­ளிக் ­கி­ழ­மைக்­குள் அனுப்பி வைக்­க­வும். வெற்­றி­பெ­றும் படைப்­பு­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­கள் உண்டு.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/

திரு­வாட்டி கிருத்­திகா, செய­லா­ளர் kiruthikavirku@gmail.com

திரு­வாட்டி பிரேமா மகா­லிங்­கம் 91696996