தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது இல்லத்தை அமைக்கும் ஸ்ரீ நாராயண மிஷன்

2 mins read
cd930dd8-f6bc-47b9-9425-b7251e8d0cd9
ஸ்ரீ நாரா­யண மிஷன் வளாகத்தில் இல்­லவாசிகள் தீபாவளி நிகழ்ச்சியை கண்டு கழிக்கின்றனர். கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்­தோ­ருக்­கும் உடல் நலி­வுற்­ றோ­ருக்கும் நீண்டகால தாதிமை சேவையை வழங்கி வரும் ஸ்ரீ நாரா­யண மிஷன் தாதிமை இல்­லம், மூப்­ப­டை­யும் சமூ­கத்­தின் தேவை­க­ளை ஈடு­கட்­டும் வகை­யில் மற்­றொரு மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தை திறக்­க­வுள்­ளது. ஈசூன் அவென்யூ 6ல் அமை­ய ­வி­ருக்­கும் இந்தப் புதிய இல்­லம், 2025க்கு பிறகு கட்டி முடிக்­கப்­படும்.

சுகா­தார அமைச்சு சில மாதங்­க­ளுக்கு முன்­பு ஈசூ­னில் முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லம் ஒன்றை அமைப்­ப­தற்­கான குத்­த­கையை ஏலத்­திற்கு விட்­டது. இந்த குத்­தகை ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­திற்கு கொடுக்­கப்­பட்ட தக­வலை ஜிபிஸ் (GeBiz) தளம் நேற்று வெளி­யிட்­ட­தாக இல்­லத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி எஸ். தேவேந்­தி­ரன் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

ஈசூன் அவென்யூ 5ல் தற்­போது உள்ள ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­தில் 224 பேருக்கு படுக்கை வசதி உள்­ளது. ஒன்­பது மாடி­கள் கொண்ட புதிய வச­தி­யில் 302 படுக்­கை­ வச­தி­கள் அமைக்­கப்­படும் என்று 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து தலைமை நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றி­வ­ரும் திரு தேவேந்­தி­ரன் கூறி­னார். "இதன் தொடர்­பில் எங்­க­ளது மேலா­ளர் அவை, நிர்­வாக செயற்­குழு, ஊழி­யர்­கள் மற்­றும் பங்­கா­ளி­கள் அனைவரும் பெரும் ஆத­ரவை அளித்­துள்­ள­னர். 42 ஆண்டு­ க­ளுக்­குப் பிறகு இரண்­டாவது இல்­லத்தை நடத்துவ­தற்­கான வாய்ப்பு பெற்ற நாங்­கள், மூத்­தோ­ருக்­குக் கூடு­தல் பரா­ம­ரிப்புச் சேவை அளிக்­கும் பேற்றை அடைந்­திருப்­ப­ தா­கக் கரு­து­கி­றோம்," என்று அவர் கூறி­னார்.

இந்­திய சமூ­கத்­தி­ன­ரி­ட­மும் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம், சிங்­கப்­பூர் இந்திய வர்த்தக தொழில்சபை, தமி­ழர் பேரவை, இந்து அறக்­கட்­டளை வாரி­யம், கடை­ய­நல்­லூர் இந்­திய முஸ்­லிம் சங்­கம் உள்­ளிட்ட இந்­திய அமைப்­பு­க­ளி­லி­ருந்­தும் பேரா­த­ரவு பெற்று வரு­வ­தா­க திரு தேவேந்­தி­ரன் குறிப்­பிட்­டார்.

இதன் தொடர்பில் பேசிய ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன், சுகா தார அமைச்சிடம் இல்லத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது குறித்து பெருமை அடைவ தாகத் தெரிவித்தார்.

சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் இல்­ல­வா­சி­க­ளை கூடு­தல் பாது­காப்­பு­டன் பராமரிப்பதற்­கா­க­வும் 2013ஆம் ஆண்­டுக்­கும் 2014ஆம் ஆண்­டுக்­கும் இடையே புதிய சாதனங்கள் தரு­விக்­கப்­பட்­டன. மருத்­துவத் தள்­ளு­வண்­டி­களை மாற்­று­தல், சாய்ந்து அமரக்கூடிய சக்­கர நாற்­கா­லி­களை அறி­மு­கம் ெசய்தது போன்றவை மேம்­பா­டு­களில் அடங்­கும். 2015ஆம் ஆண்­டில் இந்த இல்­லம் புதிய தானி­யக்க மின்­கட்­டில்­க­ளைப் பெற்றது.

புதிய இல்ல உருவாக்கத்திலும் இந்த முன்­னேற்­றப்­பா­தை­யி­லும் புதிய இல்­லம் நல்லவித­மாக அடி­யெ­டுத்து வைக்­கும் என்­றும் இத­னால் இல்­ல­வா­சி­களும் இல்­லப் பணி­யா­ளர்­களும் வலுப்­பெ­று­வர் என்­றும் திரு தேவேந்­தி­ரன் மேலும் கூறி­னார்.