கட்டுமானப் பணிகளை மறுசீரமைக்கவும் கூடுதல் சம்பளம் பெற தேவையான திறன்களை ஊக்குவிக்கவும் கட்டுமானத் துறையை உருமாற்றம் செய்ய சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் அணுகுமுறையின் நோக்கம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகளுக்கு சிங்கப்பூரர்களை ஈர்க்க சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை என்று திரு லீ கூறினார்.
கூடுதல் சிங்கப்பூரர்கள் உபகாரச் சம்பளங்கள் பெற்று
கட்டுமானத் துறையில் சேருவது மகிழ்ச்சியைத் தருவதாக தொகுதி யில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியோங் மன் வாய் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகளுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டால் கூடுதல் சிங்கப்பூரர்கள் கட்டுமான ஊழியர்களாகப் பணியாற்ற முடிவெடுக்கக்கூடும் என்றார் திரு லியோங். வலிமையான உடல் கொண்ட சிங்கப்பூரர்கள் உணவு விநியோகம் செய்வதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் தானியக்க முறை, இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் லீ கூறினார். அதன்மூலம் அதிக சம்பளத்துடன் சிங்கப்பூரர்கள் கட்டுமானத் துறையில் இணையலாம் என்றார் அவர்.

