தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

532,000 சிறாருக்கு $200 எடுசேவ் தொகை

1 mins read
749321f9-4238-46e4-9bfd-ff0fc73689c8
-

அரை மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட சிங்­கப்­பூர் சிறு­வர்­கள், தங்­கள் எடுசேவ் அல்­லது உயர்­நி­லைக் கல்விக்­குப் பிந்­திய கணக்­கு­களில், 200 வெள்ளி தொகையை இந்த மாத இறு­திக்­குள் பெறு­வார்­கள்.

ஏழு வய­துக்­கும் இரு­பது வய­துக்­கும் இடைப்­பட்ட சுமார் 532,000 சிறு­வர்­க­ளுக்கு இந்தத் தொகை அளிக்­கப்­படும் என்று நிதி அமைச்­சும் கல்வி அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

இது ஒரே முறை மட்­டும் வழங்கப்­படும் உத­வித் தொகை­யா­கும்.

பிள்­ளை­க­ளின் எடு­சேவ் கணக்­கு­களில் அர­சாங்­கம் ஒவ்­வோர் ஆண்­டும் செலுத்­தும் தொகை­யைத் தவிர்த்து தனி­யாக இத்­தொகை வழங்­கப்­ப­டு­கிறது.

பிள்­ளை­க­ளின் கல்­விச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க, 2021 வரவு செல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­கான உதவி தொகுப்­புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி ­யாக அந்த தொகை வழங்­கப்­படும்.

சிறு­வர்­க­ளின் கணக்­கு­களில் நேர­டி­யாக அத்­தொகை செலுத்­தப்­படும் என்­றும் அத­னைப் பெற அவர்­கள் தரப்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் தேவை­யில்லை என்று நிதி அமைச்சும் கல்வி அமைச்சும் தெரிவித்தன.

எடு­சேவ், உயர்­நி­லைக் கல்­விக்­குப் பிந்­திய கணக்­கு­களில் செலுத்தப்ப­டும் தொகையை ஏற்­கெ­னவே ஒப்­பு­தல் பெற்ற கட்­ட­ணங்­க­ளுக்­கும் செறி­வூட்­டல் வகுப்­பு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­த­லாம்.

தகு­தி­பெ­று­வோ­ருக்கு, தொகை வழங்­கப்­பட்­ட­தற்­கான விவ­ரங்­ களைக் கொண்ட கடி­தங்­கள் அனுப்பப்­படும்.