சிங்கப்பூர்-ஜோகூர் துரித ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளுக்கு $321.7 மில்லியன் பெமறுமானமுள்ள ஒன்பது ஒப்பந்தக் குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை ேநற்று தெரிவித்த துரித ரயில் நடத்துனர் ஆர்டிஎஸ் ஆப்ரஷேன்ஸ் (ஆர்டிஎஸ்ஓ) என்ற நிறுவனம் திட்டப் பணிகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறியது.
ஒப்பந்தக் குத்தகைகள் எப்பொழுது வழங்கப்பட்டன என்பதை ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்த ரயில் திட்டம் சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி நிறுவனம், மலேசிய போக்குவரத்து நிறுவனம் பாசரானா ஆகியவற்றுக்கிடையிலான கூட்டு முயற்சியாகும்.
ேமற்கூறிய ஒன்பது ஒப்பதந்தக் குத்தகைகளில் நான்கு மைய செயல்முறைத் திட்டங்களுக்கானது.
இதில் 'சிசிஆர்சி' என்ற சீன நிறுவனம் ரயில் திட்டத்தின் அவ்வப்பொழுது தேவைப்படும் பொருட்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.
இந்தத் திட்டத்தின் சமிக்ஞை முறை, தளமேடை தடுப்புக் கதவுகள் ஆகியவற்றுக்கு சீமன்ஸ் மொபிலிட்டி என்ற நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும்.
இதேபோல், மற்றொரு மலேசிய நிறுவனமான சப்புரா ரயில் சிஸ்டம்ஸ் ரயில் திட்டத்தின் தொடர்புக் கட்டமைப்பு, ஒருங்கிைணந்த கண்காணிப்பு கட்டுப்பாடு முைறயை கையாளும்.
துரித ரயில் திட்டத்தின் மற்ற ஐந்து ஒப்பந்தக் குத்தகைகள் ரயில் தடம், மின்சார விநியோக முறை, பணிமனைக் கருவிகள், திட்ட சேவைக்கு பயன்படும் வாகனங்கள், தானியக்க கட்டண வசூலிப்பு முறை தொடர்பானவை.
"ஒப்பந்தக் குத்தகைகள் வழங்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். துரித ரயில் திட்டம் வெற்றியடையும் வகையில் இதில் உள்ளூர், அனைத்துலக நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன," என்று ஆர்டிஎஸ்ஓ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷம்சுல் ரிசால் கருத்துரைத்தார்.
சிங்கப்பூர் நிறுவனமான ஆர்டிஎஸ்ஓ இந்த நான்கு கிலோமீட்டர் ரயில் தடம், இதன் தொடர்பில் ஜோகூர் பாருவில் அமைந்திருக்கும் வாடி ஹானா என்ற பணிமனையையும் பராமரிக்கும்.
இவ்வாண்டு ஜனவரியில் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தின் நில அகழ்வு திட்டம் இடம்பெற்றதை அடுத்து இந்தக் கூடுதல் விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து நிலத்தடிக்கு 25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ள மேம்பால இணைப்புக்கு சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் $180 மில்லியன் பெறுமானமுள்ள ஒப்பந்தக் குத்தகையை வழங்கியது.

