இருவர் மீது தகவல் பகிர்வு குற்றச்சாட்டு

இருவர் மீது தகவல் பகிர்வு குற்றச்சாட்டு

1 mins read
c6fa3075-a3d3-458c-b71b-43c1dc04a21b
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் சோத­னை­கள் தொடர்­பான தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­மைக்­காக ஆட­வர் இரு­வர் மீது அரசாங்க இர­க­சி­யங்­கள் சட்­டத்­தின்­கீழ் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டு இருக்கிறது.

வீவ­க­வில் உயர் சொத்து நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றிய கலை­ய­ர­சன் கருப்­பையா, 54, மீது நீதி­மன்­றத்­தில் நேற்று மூன்று குற்­றச்­சாட்டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கிம் டியான் சாலை, புளோக் 121ல் உள்ள ஒரு வீட்­டில் வீவக மேற்­கொள்­ள­வி­ருந்த சோத­னை­கள் குறித்து தமன்­தீப் சிங் எனும் 22 வயது இந்­திய நாட்­ட­வ­ருக்கு கலை­ய­ர­சன் சட்­ட­விரோ­த­மா­கத் தக­வல்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

தக­வல்­க­ளைப் பெற்­ற­தற்­காக அவ்வீட்­டில் வாட­கைக்­குக் குடி­ இருக்­கும் தமன்­தீப் மீதும் மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அரசாங்க இர­க­சி­யங்­கள் சட்­டத்­திற்கு முர­ணாக அந்­தத் தக­வல் பகிர்­வு­கள் இடம்­பெற்­ற­தாக நம்­பு­வ­தற்கு நியா­ய­மான கார­ணங்­கள் இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே, ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்கள் என, கலை­ய­ர­சன் மும்­முறை தமன்­தீப்­பிடம் சோதனை குறித்த தக­வலைப் பகிர்ந்­து­கொண்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

குற்­றம் மெய்ப்­பிக்­கப்­பட்­டால், ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் அந்த ஆட­வர் இரு­வ­ருக்­கும் ஈராண்­டு­வரை சிறைத் தண்­ட­னை­யும் $2,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

தமன்­தீப்­புக்கு $10,000 பிணைத்­தொ­கை­யு­ட­னும் கலை­ய­ர­ச­னுக்கு $5,000 பிணைத்­தொ­கை­யு­ட­னும் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. இரு­வ­ரும் அடுத்த மாதம் 8ஆம் தேதி வழக்­குக்கு முந்­திய கலந்­துரை­யா­ட­லுக்­காக நீதி­மன்­றத்­திற்கு வரு­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.