மனநிறைவு தரும் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்

மனநிறைவு தரும் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்

5 mins read
91d8f046-2cb7-4cec-8e45-b6391df91eba
மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் திரு அப்துல் அஜீஸ் யூசுஃப் (வலக்கோடி). படம்: திமத்தி டேவிட் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

தாய், தந்தை, சகோ­தர சகோ­த­ரி­க­ளின் குடும்­பங்­கள், பிள்­ளை­கள் என நோன்­புப் பெரு­நாளை ஒரே வீட்­டில் குதூ­க­ல­மா­கக் கொண்­டா­டு­வதை அப்­துல் அஜீஸ் யூசுஃப் வழக்­க­மா­கக் கொண்­ட­வர். நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிக்­லாப் பகு­தி­யில் பெரிய பரப்­ப­ள­வில் மூன்று தலை­மு­றை­யினர் ஒன்­றாக வாழும் வீட்­டில் வசிக்­கத் தொடங்­கி­ய­தும் ஒன்­றா­கக் கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­டு­வது இயல்­பான ஒன்­றாகி­விட்­டது. இருப்­பி­னும், சென்ற ஆண்டு நோன்­புப் பெரு­நாள் கால­கட்­ட­த்தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை முறி­ய­டிக்­கும் அதி­ர­டித் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து வீட்­டில் தங்­கி­யி­ருந்­த­வர்­கள் மட்­டுமே சேர்ந்து கொண்­டாட முடிந்­தது.

இந்த ஆண்டு ஐந்து பேர் வரை வீட்­டிற்கு வர­லாம் என்ற பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து அப்­துல் அஜீஸ், தம்­மு­டைய இரு இளைய சகோ­த­ரர்­கள் முஜிப் ரஹ்­மான், முஹம்­மது லுக்­மான், தங்கை ஸாலினா யூசுஃப் ஆகி­யோரை வீட்­டிற்கு அழைத்­துப் பெற்­றோ­ரு­டன் கொண்­டா­டு­கி­றார்.

"சகோ­தர, சகோ­த­ரி­க­ளின் குடும்­பங்­களும் சேர்ந்து கொண்­டா­டு­வது சாத்­தி­ய­மா­காது. இருந்­தா­லும் ஐவ­ரா­வது வர­லாம் என்ற நிலை­யில் இந்த நோன்­புப் பெரு­நாள் மனம் நிறை­வாக உள்­ளது," என்­றார் அப்­துல் அஜீஸ்.

பெரு­நா­ளன்று காலை­யில் எழுந்து குளித்­து­விட்டு பள்­ளி­வா­ச­லுக்­குச் சென்று தொழு­கையை மேற்­கொண்டு அதன் பின்­னர் தர்­கா­விற்­குச் சென்று வரு­வது இந்­தக் குடும்­பத்­தி­ன­ரின் வழக்­கம்.

பின்­னர், அனை­வ­ரும் அப்­துல் அஜீ­ஸின் வீட்­டிற்கு வரு­வர். தந்தை யூசுஃப் ‌‌‌ஷாஹுல் ஹமீது, தாயார் ஃபாத்திமா ‌‌‌ஷா இரு­வ­ரி­ட­மும் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­கள் அனை­வ­ரும் மன்­னிப்­புக் கேட்டு தங்­களின் பிழை­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள கோரும் சிறப்­பம்­சம் இடம்­பெ­றும்.

கொண்­டாட்ட உணர்­வில் அனை­வ­ரும் மூழ்கி வாழ்த்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்ட பின் உண­வ­ருந்தி காலை வேளை­யைக் கடப்­பார்­கள். இன்­றைய நோன்­புப் பெரு­நா­ளுக்கு பள்­ளி­வா­சல் சென்று தொழு­கையை மேற்­கொள்­வ­தில் ஒரு மாற்­றம்.

தங்­கள் வீட்­டி­லேயே அனை­வ­ரும் கூடி, குடும்­ப­மா­கத் தொழு­கையை மேற்­கொள்­கின்­ற­னர்.

தற்­போது நடப்­பில் உள்ள பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளின்­படி ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­க­ளி­லும் தொழுகை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை மிகக் குறைவு. ஒரு நேரத்­தில் 50 பேர் கொண்ட இரு குழுக்­கள், அதா­வது மொத்­தம் 100 பேர் வரை மட்­டுமே தொழக்கூடிய விதி­முறை உள்­ளது.

பள்­ளி­வா­சல்­களில் இரண்டு அல்­லது மூன்று தவ­ணை­க­ளாக அந்­தத் தொழுகை இன்று காலை நடை­பெ­று­கிறது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதற்­கான முன்­ப­திவு தொடங்கி சற்று நேரத்­தில் முடி­வுற்­றது. மொத்­தம் 17,192 இடங்­களே பெரு­நாள் தொழு­கைக்கு ஒதுக்­கப்­பட்ட பட்­சத்­தில் பலர் தங்­கள் இல்­லங்­க­ளி­லேயே குடும்­பத்­தா­ரு­டன் சேர்ந்து தொழு­கையை நிறை­வேற்ற முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

அந்த வரி­சை­யில் இன்று வீட்­டில் தொழு­கையை நிறை­வேற்­றும் அப்­துல் அஜீஸ், தமக்கு மன­நி­றை­வ­ளிக்­கும் இந்த நோன்­புப் பெரு­நா­ளுக்­குக் குடும்­பத்­தி­னர் மட்­டு­மல்­லா­மல் தமது நிறு­வ­ன­மும் அதில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­களும் கார­ணம் என்­கி­றார்.

ஊழி­யர்­க­ளுக்­கு சிறப்பு ஊக்­கத்­தொகை

துப்­பு­ர­வுத் துறை­யைச் சார்ந்த 'கிளீ­னிங் எஸ்ஸ்­பி­ரஸ்' நிறு­வ­னத்தை நடத்தி வரு­கி­றார் திரு அப்­துல் அஜீஸ் யூசுஃப்.

ஓராண்­டுக்­கும் மேலாக நோய்ப் பர­வல் சூழ­லில் வாழ்ந்­து­வ­ரும் நிலை­யில், முன்­களப் பணியை மேற்­கொண்டு வரு­கின்­றனர் நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள்.

கடந்த 1997ஆம் ஆண்­டில் இந்த நிறு­வனத்­தைத் தோற்­று­வித்­த­வர் தந்தை யூசுஃப் ‌‌‌ஷாஹுல் ஹமீது, 75. அதற்கு முன்­னர் சிறிய அள­வில் 1988ஆம் ஆண்டு இந்­தத் துறை­யில் திரு யூசுஃப் காலடி எடுத்­து­வைத்­தார். ஓய்­வு­பெற்று பேரப்­பிள்­ளை­க­ளு­டன் தம் நேரத்­தைச் செல­வி­டும் திரு யூசுஃப், தம்­மு­டைய நான்கு பிள்­ளை­க­ளி­ட­மும் நிறு­வ­னத்தை நடத்­தும் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்­டார்.

தமது மூத்த மக­னான அப்­துல் அஜீஸ், தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­க­வும் இதர பிள்­ளை­கள் மற்ற பொறுப்­பு­களில் இருந்­த­வா­றும் நிறு­வ­னத்­தைச் சிறப்­பாக நடத்தி வரு­கின்­ற­னர்.

ஏறத்­தாழ 1,200 ஊழி­யர்­க­ளைக் கொண்­டுள்­ளது நிறு­வ­னம். கிரு­மித்­தொற்று சூழ­லின்­போது நிலை­மையைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க உத­வும் ஊழி­யர்­க­ளின் அய­ராத உழைப்­புக்­கும் சேவைக்­கும் சிறப்பு ஊக்­கத்­தொ­கையை வழங்கி வரு­கிறது நிறு­வ­னம்.

இதற்­கா­கவே சுமார் $1 மில்­லி­யன் ஒதுக்கி­யுள்ள நிறு­வ­னம், மூன்று தவ­ணை­களாக தொகையை ஊழி­யர்­க­ளுக்கு வழங்கி வரு­கிறது. கடந்த நவம்­பர், தொழி­லா­ளர் தினத்தை முன்­னிட்டு இந்த மே மாதம் ஆகிய இரண்டு மாதங்­க­ளி­லும் முதல் இரண்டு தவணை ஊக்­கத்­தொகை வழங்­கப்­பட்டுவிட்­டது. அடுத்து ஆக்ஸ்ட் மாதத்­தில் இறு­தித் தவணை ஊக்­கத்­தொகை வழங்­கப்­படும்.

"உல­க­ளா­விய அள­வில் பர­வி­வ­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று, கடந்த ஆண்டு சிங்­கப்­பூரை வெகு­வாக பாதித்­தது. அந்த கால­கட்­டத்­தில் கிருமி நாசினி கொண்டு சுத்­தம் செய்­தல், எங்­கள் பணி­யின் முக்­கிய அங்­க­மாக விளங்­கி­யது.

"எல்­லை­கள் மூடப்­பட்ட நிலை­யில் மலே­சி­யா­வில் தங்கி இங்கு வேலைக்கு வந்த எங்­கள் ஊழி­யர்­கள் மிக­வும் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்­கான வச­தியை ஏற்­படுத்­து­வது ஒரு புறம் இருக்க, மேலும் சிலர் அங்­கி­ருந்து வர முடி­யா­மல் போனது. பிறகு இல்­லத் தனிமை உத்­த­ர­வுக்­கான செலவை ஏற்­றுக்கொண்­டு­ வந்­தோம்," என்­றார் திரு அப்­துல் அஜீஸ்.

"நீண்ட நேரத்­திற்­குப் பணி­யாற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அத்­து­டன் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவையை அறிந்து பள்­ளிக்­கூ­டங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், அலு­வ­ல­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இடங்­களில் தூய்­மை­யை­யும் பாது­காப்­பை­யும் உறு­தி­செய்­யும் பெரும் பொறுப்­பும் ஊழி­யர்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஊழி­யர்­கள் தன்­ன­ல­மற்ற வகை­யில் தங்­களின் வேலை­யைச் செய்­த­தற்கு எங்­கள் நிறு­வ­னம் வழங்­கும் சிறிய அன்­ப­ளிப்பே இந்த ஊக்­கத்­தொகை," என்­றார் அவர்.

துப்­பு­ர­வுச் சேவை­யு­டன் நில­வ­னப்­புச் சேவை, பூச்சி கட்­டுப்­பாட்­டுச் சேவை போன்­ற­வற்­றை­யும் வழங்­கு­கிறது அந்­தக் குழு­மம். மூத்த ஊழி­யர்­க­ளைப் பார்த்­துக் கொள்­வது முதல் துறை­சார் நிலை­க­ளை­யும் ஊழி­யர் நல­னை­யும் மேம்­ப­டுத்த நிறு­வனம் எடுத்­துள்ள முயற்­சி­கள், பங்­க­ளிப்­பு­க­ளுக்­காக இவ்­வாண்­டின் மே தின விருது பாராட்டுப் பதக்­கம் (Medal of Commendation) திரு அப்­துல் அஜீ­ஸுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

"இந்த விருதை நான் தன்­ன­டக்­கத்­துடன் பெற்­றுக்­கொள்­கி­றேன். என்­னு­டைய நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் இந்த விருதை நான் அர்ப்­பணிக்­கி­றேன். மாற்­றங்­க­ளை­யும் சவால்­களை­யும் கடந்து வர்த்­த­கம் சீராக நடை­பெற தோதாக உள்ள அவர்­க­ளின் உழைப்பு பாராட்­டிற்­கு­ரி­யது. அவர்­கள் இல்­லா­மல் இந்த விருது எனக்­குக் கிடைத்­தி­ருக்­காது. உளப்­பூர்­வ­மாக தொடர்ந்து சேவை செய்­து­கொண்டே இருக்க வேண்­டும் என்­ப­தற்கு இந்த விருது எனக்கு ஒரு நினை­வூட்­ட­லாக திகழ்­கிறது," என்­றார் அவர்.

கட்டுப்பாடுகள் இருந்தும் மன­நி­றை­வே

புனித ரம­லான் மாதம் முழு­தும் நோன்பு வைத்து, அந்த மாதம் முழு­தும் கொடை உள்­ளத்­து­ட­னும் இறை நம்­பிக்­கை­யு­ட­னும் இருந்து, ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு நன்­கொடை­கள் வழங்கி, நல்ல சேவை­க­ளைச் செய்­வது என்ற நிலை­யில் நோன்­புப் பெரு­நாள் எனும் ஈகைத் திரு­நாளை வர­வேற்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­யில் திளைக்­கி­றார் திரு அப்­துல் அஜீஸ்.

"பிள்­ளை­கள் தாத்தா, பாட்­டி­யு­டன் மகிழ்ச்­சி­யாக இந்த நாளைக் கொண்­டாடு­வது முக்­கிய நோக்­கம்.

"செய்த தவ­று­க­ளுக்கு அவர்­க­ளி­டம் மன்­னிப்­புக் கேட்டு நற்­கு­ணத்­து­டன் இருப்­ப­தும் முக்­கி­யம்.

"தொன்றுதொட்டு நாம் பின்­பற்றி வரும் பழக்­க­வ­ழக்­கங்­களை மறக்­கா­மல் அடுத்த தலை­மு­றைக்­குக் கொண்டு செல்­ல­வேண்­டி­ய­தும் அவ­சி­யம்," என்­றார் அவர்.

நோய்ப் பர­வல் சூழல் ஏற்­ப­டுத்­தும் சவால்­களை அமை­தி­யா­க­வும் கவ­ன­மா­க­வும் கடந்து, மகிழ்ச்சி பொங்க இவ்­வாண்­டின் நோன்­புப் பெரு­நாளை அனை­வ­ரும் கொண்­டா­ட­லாம் என்று புன்­ன­கை­யு­டன் தெரி­வித்­தார் திரு அப்­துல் அஜீஸ்.

"சென்ற ஆண்டுடன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு ஒரு சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நம்­மால் சற்று சிறப்­பாகவே நோன்புப் பெருநாளைக் கொண்­டாட முடி­கிறது. அந்த வகை­யில் அனை­வ­ரும் மனநிறைவு பெற­வேண்­டும்.

"வரும் காலங்­களில் நோய்ப் பர­வல் கட்­டுக்­குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்­ப­வேண்­டும் என்று அனை­வ­ரை­யும் போல நானும் இந்த நோன்­புப் பெரு­நா­ள் வேண்­டு­கி­றேன்," என்­றார் அவர்.