நோன்புப் பெருநாள் புதுப்பொலிவு பெற்ற தம்பதியரின் இல்லம்

நோன்புப் பெருநாள் புதுப்பொலிவு பெற்ற தம்பதியரின் இல்லம்

1 mins read
b7cfa8b4-4840-42bc-8e84-eb6b47ec6520
'புரோஜெக்ட் ஹேப்பினஸ் 2.0' திட்டம் வழி முகம்மது அனிஸ், அவரின் மனைவி ஷஸ்லின் வசிக்கும் வீட்டுக்குப் புதுப்பொலிவு அளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உணவு சாப்­பி­டும்­போது மனை­வி­யின் சக்­கர நாற்­கா­லிக்கு ஏற்ற ஒரு மேசை இருந்­தால் போதும் என்று விரும்­பி­னார் 53 வயது முகம்­மது அனிஸ் ஆதம். அவ­ரது ஆசை நிறை­வே­றி­ய­து­டன் இந்த நோன்­புப் பெரு­நா­ளுக்கு அவர்­க­ளது வீட்­டுக்கே ஒரு புதுப்­பொ­லிவு கிடைத்­துள்­ளது. முன்­னாள் போதைப்­பொருள் புழங்­கி­க­ளுக்­கான மறு­வாழ்வு நிலை­ய­மா­னது 'ஜாமியா இடை­நிலை இல்­லம்'. இல்­ல­வா­சி­கள் அறு­வர் சேர்ந்து திரு அனி­சின் வீட்­டுக்கு இவ்­வாறு புதுப்­பொலிவு தந்­துள்­ள­னர். இதற்­கான $2,500 செலவை இல்­லம் ஏற்­றது.

தம்­ப­திக்கு 16, 18 வய­து­களில் இரண்டு மகள்­கள் இருக்­கி­றார்­கள்.

திரு அனி­சின் மனைவி, 52 வயது திரு­வாட்டி ஷஸ்­லின் ஹசான், 2016ல் ஏற்­பட்ட பக்­க­வா­தத்­தால் சக்­கர நாற்­கா­லி­யில் நட­மாட வேண்­டிய நிலை. குடும்­பச் செல­வு­க­ளைச் சமா­ளிக்­கும் ஒரே நபர் திரு அனிஸ்.

குறைந்த வரு­மா­னப் பிரி­வி­ன­ருக்­காக 2019ல் தொடங்­கப்­பட்ட 'புரோ­ஜெக்ட் ஹேப்­பி­னஸ் 2.0' எனும் சமூ­கத்­தைச் சென்­ற­டை­யும் திட்­டத்­தின் மூலம் இது­வரை ஒன்­பது குடும்­பங்­கள் பல­ன­டைந்­துள்­ளன. தீபா­வளி, கிறிஸ்­மஸ், சீனப் புத்­தாண்டு, நோன்­புப் பெரு­நாள் என விழாக்­கா­லங்­க­ளின்­போது தேர்ந்­தெ­டுக்­கப்­படும் குடும்­பத்­தாருக்கு இத்­த­கைய உத­வி­களை இல்­லம் வழங்கி வரு­கிறது.