ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனைகள் தொடங்கின

ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனைகள் தொடங்கின

2 mins read
ffd57aa7-716e-4fb2-aaff-32926ec9d00b
-

பொதுமக்களுக்கு சாங்கி விமான நிலையம் மூடப்பட்ட முதல் நாள்

பொது­மக்­க­ளுக்கு முதல் நாளாக மூடப்­பட்ட சாங்கி விமான நிலை­யம், நேற்று அமை­தியே உரு­வ­மாகக் காணப்­பட்­டது. தங்­க­ளின் கொவிட்-19 சோத­னை­க­ளுக்­காக விமான நிலைய ஊழி­யர்­கள் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். 'ஜூவல்' மூடப்­ப­டு­தல், முனை­யங்­க­ளுக்­குள் செல்­லக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டு­தல் போன்­ற­வற்­றைப் பற்றி அறி­யா­மல் வந்­தி­ருந்த பொது­மக்­களுக்­கும் ஏமாற்­றம்.

நேற்று முதல் தொடங்கி இரண்டு வாரங்­க­ளுக்கு விமான நிலை­யத்­தின் முனை­யக் கட்­ட­டங்­க­ளுக்­குள் ஒரு சில ஊழி­யர்­களும் பய­ணி­களுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று நேற்று முன்­தி­னம் இரவு சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் (சிஏ­ஏ­எஸ்), சாங்கி விமான நிலை­யக் குழு­மம் (சிஏஜி) இரண்­டும் அறி­வித்­தி­ருந்­தன.

இந்த இரண்டு வாரங்­களில் ஜூவ­லும் மூடப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விமான நிலை­யத் துப்­பு­ர­வா­ளர் ஒரு­வ­ரி­டம் தென்­பட்ட கிரு­மித்­தொற்று கார­ண­மாக தின­மும் பதி­வா­கிய புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வந்­ததை அடுத்து, விமான நிலைய ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் பெரு­ம­ள­வி­லான கொவிட்-19 சோத­னை­கள் நடத்­தும் பணி­யில் அதி­கா­ரி­கள் இறங்­கி­னர். இதற்கு இந்த மூடல் அவ­சி­ய­மா­னது.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நட­வடிக்­கை­க­ளைத் தொடர்ந்து மறு­ஆய்வு செய்­வ­து­டன் தேவை ஏற்­பட்­டால் மாற்­றமும் செய்­யும் என சிஏ­ஏ­எஸ் மற்­றும் சிஏஜி தெரி­வித்­தன. இதன்­படி, பொது­மக்­க­ளுக்கு மூடப்­படும் கால­கட்­டம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

ஜூவ­லு­டன் முனை­யம் மூன்றை இணைக்­கும் பாலத்­தில் பாது­காப்பு அதி­காரி ஒரு­வர் நிறுத்­தப்­பட்­டுள்­ளார். அட்­டை­க­ளு­டைய ஊழி­யர்­கள் மட்­டுமே பாலத்­தைக் கடக்க அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

நிலத்­தடி பேருந்து நிறுத்­தங்­கள் மூலம் வழக்­க­மாக முனை­யம் ஒன்று மற்­றும் மூன்றுக்குள் நுழை­யும் வழி­களும் மூடப்­பட்­டன. பொது­மக்­களுக்கு விமான நிலை­யம் மூடப்­பட்­டுள்­ளது என்­பதைத் தெரி­விக்­கும் அறி­விப்­பு­கள் கத­வு­களில் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. வரு­கை­யா­ளர் அட்டை அலு­வ­ல­கம் மூல­மாக மட்­டுமே விமான நிலை­யத்­திற்­கும் செல்ல முடி­யும் என்று கூறப்­பட்­டது.

இதற்கிடையே விமான நிலைய ஊழி­யர்­கள் சிலர் குழப்­பத்­தில் காணப்­பட்­ட­னர். முனை­யம் மூன்றின் பேருந்து இடத்­திற்கு வழக்­க­மா­கச் செல்­லும் வழி­யில் அமைந்த கத­வு­கள் மூடப்­பட்­டன.

தங்­க­ளின் கொவிட்-19 சோத­னை­க­ளுக்கு வந்­தி­ருந்த ஊழி­யர்­கள் செய்­வ­த­றி­யாது நின்­ற­னர்.

பேருந்­துப் பய­ணம் வழி­யாக விமான நிலை­யத்தை அடைந்த ஒரு சில ஊழி­யர்­களும் உள்ளே வர முடி­யா­மல் கத­வு­க­ளுக்கு வெளியே காத்­தி­ருந்­த­னர். எம்­ஆர்டி நிலை­யத்­திற்­குச் செல்ல விரும்­பிய ஓர் ஊழி­யர், இதே­போல் குழப்­பத்­தில் ஆழ்ந்­தார்.

எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து மின்­ப­டி­களில் வந்­த­வர்­கள், விமான நிலைய அதி­கா­ரி­க­ளால் நிறுத்­தப்­பட்­ட­னர். ஊழி­யர்­கள் அல்­லது பயணி­கள் அல்­லா­தோ­ருக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.