இன உணர்வைப் புண்படுத்தும் செயல்: மேலும் ஒருவரிடம் போலிஸ் விசாரணை

இன உணர்வைப் புண்படுத்தும் செயல்: மேலும் ஒருவரிடம் போலிஸ் விசாரணை

2 mins read
3a96c7a4-51c6-40f2-9c82-f6fcf81fbba7
-

பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு செய்­த­தா­க­வும் மற்­ற­வர்­க­ளின் இன உணர்­வைப் புண்படுத்தும் நோக்­கில் வேண்­டு­மென்றே தகாத வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் 47 வயது ஆட­வர் ஒரு­வ­ரி­டம் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

பாசிர் ரிஸ் கடற்­க­ரை பூங்­கா­வில் மே 2ஆம் தேதி நடை­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் இந்த விசா­ரணை நடை­பெ­று­வ­தாக போலிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

அன்­றைய தினம் மாலை 6 மணி­ய­ள­வில் இந்­திய குடும்­பம் ஒன்­றை நோக்கி தகாத வார்த்தை களை அவர் உச்­ச­ரித்­த­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக அறிக்கை கூறி­யது. அந்­தக் குடும்­பத்­தைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வர் முகக்­க­வ­சம் அணி­யாததைச் சுட்­டிக்­காட்டி அவர் அவ்­வாறு நடந்­து­கொண்­டா­ராம். விசா­ர­ணை­யில் ஆட­வர் ஒத்­து­ழைப்பு அளித்து வரு­வ­தாக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு செய்­யும் குற்­றத்­திற்கு மூன்று மாதம் வரை­யி­லான சிறைத் தண்­டனை, $2,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

மற்­ற­வர்­க­ளின் இன உணர்­வைப் புண்படுத்தும் நோக்கில் வேண்­டு­மென்றே தகாத வார்த்­தை­களை உச்­ச­ரிக்­கும் குற்­றத்­திற்கு அதி­க­பட்­ச­மாக மூன்று ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத் தண்­டனை, $5,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­த­கம் விளை­விக்­கும் எந்த ஒரு செய­லை­யும் போலிஸ் கடு­மை­யாக எடுத்­துக்­கொள்­ளும் என அறிக்­கை­யில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.

இதே­போன்ற குற்­றங்­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை 30 வயது ஆட­வர் ஒரு­வரை போலி­சார் கைது செய்­த­னர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுவா சூ காங் டிரை­வில் 55 வயது இந்­திய மாது ஒரு­வ­ரி­டம் அவர் இந்­தக் குற்­றங்­களை புரிந்­த­தாக போலி­சின் விசா­ர­ணை­யில் தெரியவந்­தது. இவ்விவகாரம் தொடர்பில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் பேசினார்.