'டிரேஸ்டுகெதர்' மூலம் மட்டுமே நுழைவு: நிறுவனங்கள் மும்முரம்

'டிரேஸ்டுகெதர்' மூலம் மட்டுமே நுழைவு: நிறுவனங்கள் மும்முரம்

2 mins read
fc9b13bb-b71f-4c30-8624-0d1e5ad40138
-

எந்­த­வொரு பேரங்­காடி, வர்த்­தக நிலை­யங்­கள் உள்­ளிட்ட கட்­ட­டங்­க­ளுக்­குள்­ளும் நுழைய, வரும் திங்­கட்­கி­ழமை (மே 17) முதல் 'டிரேஸ்­டு­கெ­தர்' மூலம் மட்­டுமே சேஃப்என்ட்ரி பதி­வு­மு­றையை மேற்­கொள்ள முடி­யும்.

'டிரேஸ்­டு­கெ­தர்' சாத­னம் அல்­லது 'டிரேஸ்­டு­கெ­தர்' கைபே­சிச் செயலி மூல­மான பதி­வு­முறை அன்று முதல் கட்­டா­ய­மா­கிறது.

அதற்­கேற்­றார்போல கட்­டடங்­

க­ளின் நுழை­வா­யில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறையை மாற்றி அமைப்­

ப­தில் வர்த்­தக, தொழில் நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' என்­னும் நவீன சாத­னம் நிறு­வப்­பட்ட நுழை­வா­யி­லின் வழி­யா­கக் கடக்­கும்­போது 'டிரேஸ்­டு­கெ­தர்' சாத­னம் அல்­லது செய­லியை அத­ன­ரு­கில் காண்­பித்­தால் போதும்.

பொதுக் கூடங்­கள் இத்­கைய வச­தியை நுழை­வா­யி­லில் அமைக்க ஜூன் 15 வரை காலக்­கெடு விதிக்­கப்­பட்டு உள்­ளது. இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் தொடர்­பு­கொண்ட பெரும்­பா­லான வர்த்­த­கச் சங்­கங்­களும் தொழில்­நி­று­வ­னச் சங்­கங்­களும் புதிய வச­திக்­குத் தயா­ரா­கி­விட்­ட­தாகக் கூறின. சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் சங்­கம் ெதரி­விக்­கை­யில். சங்­கத்­தில் உறுப்­பி­ன­ராக உள்ள 80 நிறு­வ­னங்­களில் சுமார் 80% புதிய ஏற்­பாட்­டுக்­குத் தயா­ரா­கி­விட்­ட­தா­கக் கூறி­ய­தா­கத் தெரி­வித்­தது. மற்­றவை ஏற்­பா­டு­களில் தீவி­ர­மாக உள்­ள­தா­க­வும் அது கூறி­யது. இச்­சங்­கத்­தில் சுமார் 8,000 சிறிய, நடுத்­தர வர்த்­த­கங்­கள் உறுப்­பி­ன­ராக உள்­ளன.

சிங்­பாஸ் செயலி மூல­மும் கைபேசி கேமரா மூலம் 'க்யூ­ஆர்' குறி­யீட்டை வரு­டு­வ­தன் மூல­மும் வரு­கைப் பதிவை மேற்­கொள்­ளும் தற்­போ­தைய நடை­முறை விடை­பெற இருப்­ப­தால் அதனை உரு­மாற்­று­வ­தில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளுக்­குப் பிரச்­சினை இல்லை என சங்­கத்­தின் தக­வல் தொடர்பு துணைத் தலை­வர் திரு­வாட்டி லூயிசா லீ கூறி­னார்.

சில நிறு­வ­னங்­கள் இட­ம் மா­றிய பின்­னர் 'க்யூ­ஆர்' குறி­யீட்டை புதுப்­பிப்­ப­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவற்­றுள் சில தொழில்­நுட்ப, நிர்­வா­கக் கோளா­று­க­ளைச் சந்­தித்து வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.