மக்கள் கவிஞர் மன்றத்தின் 'குறும்படங்கள் ஒரு பார்வை'

2 mins read
51c470ac-b432-441c-a03f-7fecad0e953e
-

மக்­கள் கவி­ஞர் மன்­றத்­தின் 17ஆம் ஆண்டு தொழி­லா­ளர் தின விழா­வில் புதுமை. திரை­யு­ல­கில் தமது பாடல் வரி­களால் புதிய மாற்­றத்தைக் கொண்டு வந்த மக்­கள் கவி­ஞரின் வரி­க­ளான "செய்­யும் தொழிலே தெய்­வம்" என்ற பாடல் வரி­கள் தொழி­லா­ளர் தினப் பாட­லாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்­கி­யது.

இதை­ய­டுத்து மக்­கள் கவி­ஞர் மன்­றத்­தின் தலை­வர் தமது உரை­யில் யாவ­ரை­யும் வர­வேற்று பேசி­விட்டு மன்­றத்­தின் தொடர்ந்த செயல்­பாடு­ க­ள் ­பற்றி கூறி­னார்.

தமிழ்த் திரை­யு­ல­கில் தமது பாடல் வரி­க­ளால் புதிய மாற்­றம் செய்த மக்­கள் கவி­ஞ­ருக்கு விழா எடுக்கை­யில் திரைப்­ப­டங்­களைவிட மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் குறும்­ப­டங்­களைப் பற்றி சிறப்­பு­ரை­யாற்றத் தகுதி வாய்ந்­த­வ­ரான நிழல் அரசு இவ்­வி­ழா­வில் இணைந்­துள்­ளதை பெரு­மை­யாக கரு­து­வ­தாகக் கூறினார். நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான மன்­றத்­தின் துணைச் செய­லா­ளர், சிறப்­பு­ரை­யாற்றும் திரு நிழல் அரசுவை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

பின்னர் நவீன சினி­மா­வுக்­கான கள­மாக தமி­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­ வ­ரும் "நிழல்" காலாண்­டி­த­ழின் ஆசி­ரி­ய­ரும் நிழல் - பதி­யம் என்ற திரை­யு­ல­கத் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் நிறு­வ­ன­ரு­மான நிழல் திரு­நா­வுக்­க­ரசு சிறப்­பு­ரை ஆற்றினார். ­

'குறும்­ப­டங்­கள் ஒரு பார்வை' என்ற தலைப்­பில் திரு நிழல் அரசு தமது சிறப்­பு­ரை­யில், "சிறுகதைக்கு என்ன இலக்­க­ணமோ அது­தான் குறும்­ப­டங்­க­ளுக்கும். 2 மணி­ நேர முழுநீள வர்த்­தக சினிமா, சமூ­கத்­தில் தராத தாக்­கத்தை 10 நிமிட குறும்­ப­டங்­கள் ஏற்­ப­டுத்­தும்," என்ற அவர் கூறினார்.

மேலும் An Occarance At Owel Creek Bridge, அகல்யா, மலே­சி­யா­வின் "மட­மைக்கு அஞ்­சேல்", தமி­ழ­கத்­தின் "மீனா", சிங்­கப்­பூ­ரின் "டார்க் லைட்" போன்ற 5 குறும்­படங்­க­ளைப் பற்றி பேசி­னார்

தொடர்ந்து இறுதி மூன்று படங்­க­ளின் இயக்­கு­நர்­கள் தங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். இதை­ய­டுத்து கேள்வி பதில் அங்­கத்­தில் பார்­வை­யா­ளர்­கள் பங்கு பெற்­ற­னர்.

இறு­தி­யில், மன்றத்தின் செய­லா­ளர் நன்­றி­யுரை­யாற்றினார்.