சமூகத்தில் புதிதாக 24 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சமூகத்தில் புதிதாக 24 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
58b4ddf1-514c-4d7d-b9d7-4605d77dab0b
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 52 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி­யா­னது. அவர்­களில் 24 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள்.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் நால்­வ­ருக்கு வேறு யாரு­ட­னும் தொடர்­பில்லை. 13 பேர் சாங்கி விமா­ன­நி­லைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

எஞ்­சிய ஏழு பேரும் முன்பு கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 16 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­வர்­கள். வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த 28 பேருக்கு தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்த அந்த 28 பேரில் 19 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் புதி­தாக நேற்று யாருக்­கும் தொற்று இல்லை.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 61,505 ஆக உயர்ந்­துள்­ளது. வியா­ழக்­கி­ழ­மை­யன்­றும் சமூ­கத்­தில் புதி­தாக 24 பேருக்கு தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அமைச்சு அறி­வித்­தது. அவர்­களில் நால்­வர் வேறு யாரு­ட­னும் தொடர்­பில்­லா­த­வர்­கள். அந்த நால்­வ­ரில் துணைப்­பாட ஆசி­ரி­யர், இரண்டு வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­கள், ஒரு­வர் குடும்ப மாது அடங்குவர்.

வியா­ழக்­கி­ழமை தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­ட­வர்­களில் பலரும் சாங்கி விமான நிலை­ய முனையம் 3க்குச் சென்று வந்தவர்கள்.