கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பயணிகளைக் கையாண்ட பிரிவு சாங்கி விமான நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து பரவல்

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பயணிகளைக் கையாண்ட பிரிவு சாங்கி விமான நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து பரவல்

3 mins read
3b95d3bf-7b93-47a1-b2fe-e7ac5a8931b0
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் வாயில்களில் நேற்றிரவு 7 மணிவாக்கில் புதிய அறிவிப்புகளை அதிகாரி ஒருவர் ஒட்டுகிறார். முனையத்தின் வாயில்களில் மூன்றுதான் திறந்துள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மி தொற்­றிய சாங்கி விமான நிலைய ஊழி­யர்­கள் பெரும்­பா­லும், தெற்கு ஆசியா உட்­பட அதி­க தொற்று அபா­யம் உள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பயணி­கள் இருந்த ஒரு பகு­தி­யில் பணி­யாற்­றி­ய­வர்­கள்.

விமான நிலை­யத்­தில் ஏற்­பட்ட முதல் சுமார் 20 கிரு­மித்தொற்­றுச் சம்­ப­வங்­களை ஆராய்ந்த பின்­னர் அங்­குள்ள அதி­கா­ரி­கள் இதை அடையாளங்கண்டனர்.

கொவிட்-19 தொடர்­பான மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்ட நேற்­றைய செய்­தி­யாளர் கூட்­டத்­தின்­போது, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் திரு ஓங் யி காங் அத­னைத் தெரி­வித்­தார்.

பய­ணி­கள் தாண்­டிச் செல்­லக் கூடிய குடி­நு­ழை­வுப் பகுதி, பய­ணப் பெட்­டி­க­ளைப் பெற்றுக்கொள்ளும் இடம் ஆகியவையும் அதில் அடங்­கும் என்­றார் திரு ஓங்.

டான் டோக் செங் மருத்­து­வ­மனை சிகிச்சைப் பிரிவு 9D­யில் இருந்து எவ்­வாறு கொவிட் கிருமி பர­வி­யதோ, அதைப் போலவே விமான நிலை­யத்­தின் குறிப்­பிட்ட பகு­தி­யி­லி­ருந்து கிரு­மித்­தொற்­று­பர­வி­யுள்­ளது.

கொவிட்-19 தொற்று அதி­கம் ஏற்­பட்ட அந்த பகு­தி­யி­லி­ருந்­து­தான் ஊழி­யர்­கள் 3ஆம் முனை­யத்­தில் உள்ள இரண்­டாம் அடித்­த­ளத்­தில் உள்ள கடை­க­ளுக்­கும் உண­வங்­கா­டிக்­கும் செல்­வார்­கள்.

இரண்­டாம் அடித்­த­ளத்­துக்­குச் சென்ற பொது­மக்­க­ளுக்­கும் கிருமி தொற்றி இருக்­கக்­கூ­டும் என அதி­கா­ரி­கள் கருதுவ­தாக திரு ஓங் கூறி­னார்.

மே 8 அன்று அறி­விக்­கப்­பட்ட சமூக அள­வி­லான தொற்­று­களில் 18 வயது விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூரி மாண­வி­யும் ஒரு­வர்.

அவர் சாங்கி விமான நிலைய 3ஆம் முனை­யத்­தின் இரண்­டாம் அடித்­ த­ளத்­தில் உள்ள கோப்­பித்­தி­யாம் உண­வங்­கா­டிக் கடைக்­குச் சென்­ற­தாக பின்­னர் தெரிய வந்­தது.

அடுத்த நாள், மூன்­றாம் முனை­யத்­தின் இரண்­டாம் அடித்­த­ளத்­தில் கடை­கள் அமைந்­தி­ருக்­கும் முழுப் பகு­தி­யும் மூடப்­பட்டு சுத்­தம் செய்­யப்­பட்­ட­தாக திரு ஓங் தெரி­வித்­தார்.

விமான நிலை­யம் அதன் பிறகு தனது கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளது. அதன் பகு­தி­கள், வெவ்­வேறு தொற்று அபாய அள­வு­களுக்கு ஏற்ப பிரிக்­கப்­பட்­டுள்­ளன. தொற்று அபா­யம் அதிகம் உள்ள இடங்­களில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

தொற்று அபா­யம் அதி­கம் உள்ள பகு­தி­களில் பணி­யாற்­று­பவர்­கள் தனிப்­பட்ட பாது­காப்பு ஆடை­களை­யும் கவ­சங்­க­ளை­யும் அணிய வேண்­டும்.

அத்­து­டன், அந்த இடங்­க­ளுக்­குள்ளே உணவு சாப்­பிட வேண்­டும். உண­வுக்­காக அவர்­கள் மற்ற பகுதி ­க­ளுக்­குச் செல்ல முடி­யாது.

கிருமி தொற்­றிய ஊழி­யர்­கள் நல்ல உடல்­நி­லை­யில் உள்­ள­னர்

இது­வரை, 28 விமான நிலைய ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யுள்­ளது. அவர்­களில் 19 பேர் ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்டுக்கொண்டவர்கள்.

அவர்­கள் அனை­வ­ரது உடல்­நிலை­யும் நன்­றாய் இருப்­ப­தா­க­வும் உயிர்­வா­யு­வின் உதவி இல்­லா­மல் அவர்­கள் சுவா­சித்து வரு­வ­தா­க­வும் திரு ஓங் தெரி­வித்­தார்.

சாங்கி விமான நிலை­யத்­தில் உள்ள தொற்­றுக் குழு­மம், ஊழி­யர்­க­ளுக்கு இடையே மட்­டும் பர­வி­யுள்ள குழு­ம­மாக இருக்­கும் என்று திரு ஓங் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"துறை­மு­கத்­தி­லும் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யி­லும் செய்­துள்­ள­தைப் போல, தனிமை உத்­தரவு­கள், பரி­சோ­த­னை­கள் ஆகி­ய­வற்­றின் வழி தொற்­றைக் கட்­டுப்­படுத்த முடி­யும் என்ற நம்­பு­கி­றோம்," என்­றார் திரு ஓங்.

500 ஜுவல்

ஊழி­யர்­க­ளுக்கு தொற்று ­இல்லை

சாங்­கி விமான நிலை­யத்­தின் ஊழி­யர்­க­ளுக்கு செய்­யப்­பட்டு வரும் பரிசோத­னை­க­ளின் ஒரு பகுதி­யாக, ஜுவல் ஊழி­யர்­கள் சுமார் 500 பேருக்­கு பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் யாருக்­கும் கிரு­மித்தொற்­று இல்லை என்­றும் தெரிய வந்­துள்­ளது.

விமான நிலை­யத்­தின் சுமார் 9,000 ஊழி­யர்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு நில­வ­ரப்­படி 7,641 ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித் தொற்­றுப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக திரு ஓங் தெரி­வித்­தார்.

அவர்­களில் 6,000 பேருக்கு பரி­சோ­த­னை­ முடி­வு­கள் வந்­து­விட்­ட­து. ஆறு பேருக்கு கிரு­மித் தொற்று இருப்பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள தொற்றுக் குழுமம் சிங்கப் பூரின் ஆகப் பெரிய தொற்றுக் குழுமமாக உள்ளது.

தொற்றுள்ளவர்கள் பலருக்கும் இந்தியாவில் பரவிவரும் பி1617 உருமாறிய கிருமிவகை தொற்றிய தாக பரிசோதனைகளின் முன் னோட்ட முடிவுகள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.