இயோ சூ காங் பள்ளி மாணவருக்குத் தொற்று; வீட்டிலிருந்தபடி பாடம் கற்றல்

இயோ சூ காங் பள்ளி மாணவருக்குத் தொற்று; வீட்டிலிருந்தபடி பாடம் கற்றல்

1 mins read
c8dc7540-4e41-493b-944b-c7853877e64a
-

இயோ சூ காங் தொடக்­கப் பள்­ளி­யில் முத­லாம் ஆண்டு பயி­லும் மாண­வ­னுக்கு கடந்த புதன்­கிழமை கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­வு­டன் அந்­தப் பள்­ளி­யில் அடுத்த மூன்று நாட்க­ளுக்கு அனைத்து மாண­வர்­களும் தங்­கள் பாடங்­களை வீட்­டி­லி­ருந்­த­படி கற்­கும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

மாண­வ­னுக்கு ஏற்­பட்ட தொற்று பள்ளி சார்ந்­த­தல்ல என்­றும் கிருமி தொற்­றி­யி­ருந்த அவ­ரது குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து அவ­ருக்­குத் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது என்­றும் கல்வி அமைச்சு விளக்­கி­யது.

கடந்த திங்­கட்­கி­ழமை அந்த மாண­வன் பள்­ளிக்கு வந்­த­போது அவர் நல­மு­டன் இருந்­தார். ஆனால் அடுத்த நாளே அவ­ருக்கு உடல்­ந­ல­மில்லை என்­ற­தால், அவர் மருத்­து­வரை நாடி­னார்.

சம்­பந்­தப்­பட்ட மாண­வ­னு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த மற்ற மாண­வர்­களும் பள்ளி ஊழி­யர்­களும் கடந்த புதன்­கி­ழமை முதல் இம்­மா­தம் 24ஆம் தேதி வரை தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் அனை­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.