புதிய கட்டுப்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் பரிந்துரைகள் என தொழில்துறை வரவேற்பு

புதிய கட்டுப்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் பரிந்துரைகள் என தொழில்துறை வரவேற்பு

1 mins read
b401012c-fd6d-4001-bedd-646e424146c2
-

தேசிய சம்­பள மன்­றத்­தின் பரிந்­து­ரை­கள் நடு­நி­லை­யு­டன் அமைந்­தி­ருப்­ப­தாக தொழில்­துறை கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நன்­றாக இயங்­கும் நிறு­வ­னங்­கள் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கக் கோரும் அதே­நே­ரம் புதிய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் மோச­மான நிலை­யைச் சந்­திக்­கும் நிறு­வ­னங்­கள் நீக்­குப்­போக்­கான சம்­பள முறை­யைத் தொட­ர­லாம் என்­றும் பரிந்­து­ரை­கள் அமைந்­தி­ருப்­பதை அவர்­கள் சுட்­டி­னர். மன்­றத்­தில் உயர்­மட்­டக் குழு நேற்று வெளி­யிட்ட வழி­காட்­டிக் குறிப்­பு­க­ளைத் தொடர்ந்து அவர்­கள் இவ்­வாறு கருத்­து­ரைத்து உள்­ள­னர்.

இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் பேசிய சிங்­கப்­பூர் அனைத்­து­லக வர்த்­தக சபை­யின் தலைமை நிர்­வாகி விக்­டர் மில்ஸ், "சம்­பள மன்­றத்­தின் அறி­விப்பு மிகச் சரி­யாக அமைந்­துள்­ளது. இதற்கு மேல் இன்­னும் என்ன பரிந்­து­ரைக்­கப்­பட்டு இருக்­க­லாம் என்­ப­தற்கோ என்ன விடு­பட்­டுள்­ளது என்­ப­தையோ கணிப்­பது கடி­னம்.

"ஆக அண்­மைய பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்ப கூடு­தல் அர­சாங்க ஆத­ரவை பரிந்­து­ரை­கள் உள்­ள­டக்கி இருப்­ப­தை­யும் காண­மு­டி­கிறது. இந்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம் என்­ப­தைப்­போல அதி­க­ரிக்­கப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­ட­மும் ஒரு மாத வாடகை விலக்­கும் உணவு, பானத் துறைக்கு உத­வி­யாக அமை­யும்," என்­றார்.

நாளை முதல் உண­வ­கத்­திற்­குள் அமர்ந்து உண்ண அனு­மதி இல்லை என்னும் புதிய கட்­டுப்­பாட்டு அறி­விப்­பைத் தொடர்ந்து உணவு, பான வர்த்­த­கங்­க­ளுக்­கான வேலை ஆத­ர­வுத் திட்ட உத­வியை அர­சாங்­கம் 50 விழுக்­காடு உயர்த்த உள்­ளது. இவ்­வாண்டு ஜூன் வரை வழங்­கப்­பட உள்ள 10 விழுக்­காடு சம்­பள ஆத­ரவு 50 என்­னும் இந்த உயர்­வைக் காண்­கிறது.