கைக்குழந்தையைக் தூக்கி வீசிய 36 வயது இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
குழந்தையை மோசமாக நடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தையின் அடையாளத்தைக் காப்பதற்காக பணிப்பெண்ணின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. வீட்டு வேலைகளைச் செய்யவும் இரு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவும் 2019 டிசம்பரில் அந்தப் பணிப்ெபண் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அவர் கைக்குழந்தையின் கையின் மேல்பகுதியைப் பிடித்து சோபாவை நோக்கி பலவந்தமாக வீசினார். சோபாவின் கைப்பிடியில் குழந்தையின் தலை மோதியது.
உறையுடன் கூடிய அந்தக் கைப்பிடி மரத்தாலானது. மோதிய வேகத்தில் குழந்தை அழுவது அங்கு நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
ஒட்டுமொத்த சம்பவமும் கேமராவில் பதிவானது.
அது நேற்று நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. வீட்டிலிருந்த பொருட்களைச் சிதறடித்ததால் குழந்தை மீது தமக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் பணிப்பெண் கூறினார்.
நடந்த சம்பவத்தை கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த தமது கைபேசியில் பார்த்த குழந்தையின் தாயார் உடடினயாக போலிசை அழைத்தார்.
அவரும் அவரது கணவரும் விசாரித்தபோது குழந்தையைக் தூக்கிச்சென்றபோது கைப்பிடியில் மோதிவிட்டதாக பணிப்பெண் தெரிவித்தார். அது பொய் என்பதை கண்காணிப்பு கேமரா நிரூபித்தது.

